பக்கம் எண் :

பக்கம் :238பூங்கொடி

 

நின்கடன்

 
     
  அன்னை மொழிக்கே அரியணை வேண்டும்
என்னும் ஆசை என்னைப் பிணைத்தது;
நின்மக ளாசை நிறைவுறச் செய்வது
நின்னை யல்லால் பின்னை எவர்கடன்?
 
  சூழ்நிலை யொன்றும் துணையெனக் கொளாது 55
  வாழ்நா ளெல்லாம் வண்டமிழ் மொழிக்கே
உழைத்துழைத் திருந்தேன் உறுபயன் என்கொல்?
 
 

பொற்காலம் பூக்குமோ?

     
  மழைத்துளி கண்ட வான்பயிர் போல
முளைத்ததோர் உணர்ச்சி! தழைத்தது தாய்மொழி!
 
  புதியபொற் காலம் பூத்தது! நாட்டில் 60
  முதியரும் இளைஞரும் மூண்டெழுந் தார்த்தனர்!
என்றுமுள தென்றமிழ் என்னும் வாய்மொழி
நின்று நிலைத்தது எனுநிலை வருங்கொலோ?'
என்றுபல புலம்பி இருவிழி சோர;
 
     
 

பூங்கொடி நோய்வாய்ப்படல்

 
     
  `வரும்வரும்' என்று சிறையகம் திறந்தே 65
  ஒருமகள் வந்தவண் உணவொடும் நின்றனள்;
திருமகள் உணவினைத் தீண்டவும் செய்திலள்;
வருமகள் வருந்தி வஞ்சியின் உடம்பைத்
தொட்டனள்; தழலாய்ச் சுட்டது மெல்லுடல்;
 
  சட்டெனக் காவலர்க் குற்ற துரைத்தனள்; 70
     
 

மருத்துவ மனைக்கு விலங்குடன் செல்லல்

 
     
  வெப்பு நோயின் வேகம் ஏறி
ஒப்பிலாள் படுதுயர் உணர்ந்த காவர்
குற்றம் பிரிய நற்றமிழ் மங்கையைப்
பற்றும் விலங்கொடு பற்றினர் சென்று
 
  மருத்துவ மனையிற் கிடத்தினர் அந்தோ! 75

---------------------------------------------------------------

  பின்னை - பின்பு.