பக்கம் எண் :

பக்கம் :38பூங்கொடி

  புகுந்து வினவிப் போதல் போலத்  
  தகுந்த மலர்தொறும் தண்மது வுண்ணக்
குடைந்து குடைந்து கொட்புறும் வண்டினை
நடந்து மெலிந்த நங்காய் நோக்குதி!
தென்புறந் தருமொரு தென்றல் மலர்தொறும்
அன்புடன் தழுவி அசைந்து மெல்லென
20

 

நம்முடல் வருடி நலந்தரல் நுகர்வாய்! 25
     
 

புற்றரைக் காட்சி

 
     
  பைம்புற் பரப்புப் பசும்படாம் விரித்தெனத்
தோன்றும், இடையிடைத் துளிர்விடு செடிகள்
ஈன்ற மலர்வகை எழில்பெற வரைந்த
சித்திர வகையை ஒத்திடல் காணாய்!
 
     
 

பொய்கைக் காட்சி

 
     
  இந்நாள் விடுமுறை எனுஞ்சொற் செவியுறத்
துள்ளிக் குதிக்கும் பள்ளிச் சிறாரென
வெள்ளைக் கயல்கள் விடுபுனற் பொய்கையில்
தாவிக் குதிக்கும், தவஞ்செய் கொக்கு
மேவிப் பற்ற முயன்றும் மீன்பெறாது
30
  ஏங்கிநின் றிரங்குதல் காண்'என அல்லி
பூங்கா எழிலும் பொய்கையும் காட்டப்
பூங்கொடி அவ்வெழிற் பூவனம் காண்புழி,
35
     

கோமகன் முகுந்தனை வினவல்

     
  அவ்வூ ராங்கண்அரிதின் முயன்றுறு
பெருநிதிக் கிழவன் பெட்புறு மைந்தன்
 
  கோமகன் என்பான் கோடுயர் மாட 40

---------------------------------------------------------------

  கொட்புறும் - சுழலும், படாம் - துணி, சிறார் - சிறுவர்கள், பெட்பு - விருப்பு.