பக்கம் எண் :

பக்கம் :40பூங்கொடி

 

படிப்பகம் புகுதல்

 
     
  அல்லி வெருவி ஆங்குள படிப்பகம்  
  அதனுட் புகுகென அரிவையைக் கடத்தித்
தான்வெளிப் புறத்தே தனிமையில் நின்றனள்;
65
     
 

கோமகன் காமவுரை

 
     
  காமம் என்னும் கடுவிட நாகம்
செக்கர் மாலைத் தென்றலின் இசையால்
பக்கம் நின்று படம்விரித் தாடித்
 
  தீண்டஅப் பெருமகன் சிறுகுணம் மேவி
நீண்ட உயிர்ப்பொடும் நெருங்கி வருவோன்
கனிமொழி அல்லியைக் கண்களில் நோக்கித்
`தனிவெளி நின்றாய்! தந்திரம் அறிவேன்;
நனிஎழில் நங்கைஎன் காதல் நலத்தை
70
  உணரும் ஆற்றல் உற்றனள் கொல்லோ?
புணர்மணம் கொள்ளாள் பொதுநலம் பேணி
இளமை கழித்திடல் ஏனோ? வாழ்வெனும்
குளம்பெறு மலராம் கூடிய இளமை;
மலர்மணம் வீச மனங்கரு தாமல்
75
  அலரின் கொடியை அறுத்திடல் நன்றோ?
இன்பத் துறவு துன்ப விடுதலை
ஈயுந் திறத்ததோ? இதழ்கள் எத்துணை
ஆயிரம் இருப்பினும் தோயுறும் மதுவைக்
காத்திட வல்லதோ பூத்தநற் றாமரை?
80
  ஆர்த்திடும் சுரும்பினம் அருந்துதல் உறுதி;
பொறிகளின் கதவைப் பூட்டி வைப்பின்
நெறிதடு மாறி நெஞ்சங் கலங்கும்;
85

---------------------------------------------------------------

  வெருவி - அஞ்சி, அரிவை - பெண் (பூங்கொடி), செக்கர் -சிவந்த, உயிர்ப்பு - மூச்சு, பொறிகள் - மெய் முதலிய ஐம்பொறிகள்.