பக்கம் எண் :

படிப்பகம் புக்க காதைபக்கம் : 41

 

கொழுநன் ஆவேன்

 
     
  கொழுகொம் பின்றிப் பூங்கொடி தவித்து
விழுவது பொறேனாய்க் கொழுநன் ஆவேன்
 
  எனுமுயர் நினைவால் இரங்கி வந்துளேன்;
நின்பூங் கொடியோ நேரிசைக் குலத்தாள்
என்பெரு நிலையினை இசைத்தால் உடன்படும்;
90
     
 

உடன்படச் செய்க

 
     
  குறளகம் விடுத்துக் குமரன் என்னைப்
பெறுமணங் கொள்ளப் பெட்டனள் ஆயின்
 
  அளப்பருஞ் செல்வம் அனைத்தும் ஈவேன்;
களைத்துடல் இளைக்கக் கருதா தென்றன்
காதற் கடலைக் கடந்திட அவளை
மாலுமி யாக்கி மகிழ்ந்திடக் குறித்தேன்;
வேலெனும் விழியாய்! வேண்டினென் நின்னை
95
  மதியுடம் படச்செய்!' எனும்அம் மாற்றம்
செவியுற நெஞ்சம் செயலறக் கலங்கி
நவையறச் சிலசொல் நவின்றனள் அல்லி;
100
     
 

அல்லியின் அறிவுரை

 
     
  `செல்வக் கோவே! சீர்சால் கல்வி
மல்குறு நினக்கு மங்கையர் அறிவுரை
 
  குறிப்பது நன்றன் றாயினும் குறிப்பேன்;
விருப்பிலா மகளிரை விழைவது முறையோ?
கருத்தொரு மித்தால் காதல் சிறக்கும்;
ஒருபால் அன்பால் உறுபயன் ஒன்றிலை;
105

---------------------------------------------------------------

  பொறேன் - பொறுக்கமாட்டேன், பெட்டனள் - விரும்பினள், நவை - குற்றம், மல்குறு - நிறையும், விழைவது - விரும்புவது.