| சிறுவர் கூடிச் சிற்றில் இழைத்து | |
| மறுகணம் சிதைத்து மகிழ்வுறல் போலத் திருமணம் செய்து திரிவது பேதமை; அறிவுடை மாந்தர் அதனை ஒவ்வார்; நல்லியல் மாதர் நலம்பெறு வாழ்வைச் செல்வச் செருக்கால் சேர்வுறு பிறப்பால் | 110 |
| வெல்லக் கருதின் விளைவது வேறு; சொல்லக் கூசேன் மெல்லியல் மாதரார் பிள்ளைப் பூச்சிகள் அல்லல் பெரியோய்! காமங் கதுவைக் கருத்தினை விடுப்பின் நாமங் கேடுறும் நல்லறந் தீயும் | 115 |
| தீமை பற்பல சேர்வது திண்ணம்; மாதரார் உளப்பாங் கியாதென உணர்ந்து காதல் மேற்கொளல் கடமை யாகும்; | 120 |
| | |
| காமங் கடந்தவள் | |
| | |
| காமம் என்னும் கள்வன் றனக்கே புகஇடம் கொடாஅள் பூட்டி, நிறைஎனும் | |
| காப்பமைத் திருத்தலின் கற்பெனும் மாமணி காத்திடல் வல்லாள், கருத்தினில் வைப்பாய்! என்னுயிர்ப் பாங்கி இல்லற வாழ்வினை உன்னுதல் துறந்தே ஓங்குயர் பொதுப்பணி ஒன்றே உயிர்ப்பென உவப்புடன் பூண்டனள் | 125 |
| இன்றே அவள்பால் எழுமனம் விடுக!' என்றவள் உரைத்த இவ்வுரை அவன்மனம் பொருந்தா முன்னர்ப் பூங்கொடி உருவம் | 130 |
| விருந்தா கியதே கோமகன் விழிக்கே. | 133 |
--------------------------------------------------------------- |
| ஒவ்வார் - கருதார், கதுவ - பற்ற, நாமம் - பெயர், கொடாஅள் - கொடுக்கமாட்டாள். | |
| | |