| 5. தாமரைக்கண்ணி தோன்றிய காதை | |
| கோமகன் கலக்கம் | |
| கோமகன் விழியிற் குலமகள் படுதலும் காமங் கதுவிய கருத்தின னாகிப் படிப்பகம் புகுதப் பார்த்தனன்; `அடஓ! சித்தமும் விழியும் சேர்ந்து பதிந்திடப் | |
| புத்தகம் பயில்வோர் பொருந்திடன் அன்றோ! புத்தகம் புரட்டும் புல்லென் ஓசையும் உரவோர் உயிர்க்கும் ஓசையும் அன்றி அரவம் சிறிதும் அறியா இடமாம்; அறிவை வளர்க்கும் ஆய்வுரை நூல்பல | 5 |
| நிறைதரும் அவ்வகம் தூய்மை நிலையம்; கொள்கைச் சான்றோர் குழுமும் நூலகம்; உள்ளிற் செல்லுதல் ஒவ்வா தன்றோ! சீரியோர் பலரும் சீறுவர் இகழ்வர் வேறிடங் கூடுவென்' எனமனம் வெதும்பி | 10 |
| | |
| கோமகன் அல்லியை வினவல் | |
| | |
| அகல்வோன் அல்லி அணிமுகம் நோக்கி `நகைமுக நங்காய்!என் நலிவினைக் காணுதி! இளையள் என்னை ஏற்றருள் வாள்கொலோ? உளையும் எனக்குயிர் உவந்தளிப் பாள்கொலோ? எத்திறத் தாள்நின் இளங்கொடி? உரை'எனச் | 15 |
| சித்தங் கலங்கிச் செப்புவள் அல்லி, | 20 |
| | |
| அல்லியின் மறுமொழி | |
| | |
| 'எத்தனை முறைநினக் கியம்புவென் பெரும! வித்தக! விண்மீன் வலையினிற் சிக்குமோ? | |
--------------------------------------------------------------- |
| புல் - ஒலிக்குறிப்பு, அரவம் - ஒலி, குழுமும் - கூடும், உளையும் - வருத்தும். | |
| | |