பக்கம் எண் :

பக்கம் :44பூங்கொடி

  தத்தை கொடுஞ்சிறைக் கூண்டுள் தங்கிட
விழைதல் உண்டோ? விடுவிடு காமம்!
 
  மழைமுகில் தொடுதர வானுயர் கோவில்
அழுக்கும் இழுக்கும் பெருகி ஆங்குப்
புழுக்கள் நெளிதரல் போலச் செல்வர்
நெஞ்சில் தீக்குணம் நெறிந்தன போலும்;
வெஞ்சினங் கொள்வாள் நின்முகம் நோக்காள்
25
  வஞ்சி குறிக்கோள் வாழ்வினள் ஆதலின்
விஞ்சுங் காமம் விடுவிடு' என்றனள்;
30
     
 

அல்லியின் வரலாறு வினவல்

 
     
  `புயலைத் தடுக்கஓர் பொறியும் உளதோ?
மயலை விடுக்க மதியுரை புகன்றனை!
கயல்விழி! நன்'றெனக் காமுகன் நகைத்து,
 
  `மடம்படு மாதே! மற்றொன்று வினவுவல்
வடபுலந் திருப்போன் வளநிதி மிக்கோன்
வெருகன் எனும்பெயர் மருவிய ஒருவன்
பெறுமனை நீயெனப் பேசிடும் இவ்வூர்
அவனை நீங்கி ஆயிழை யிவளொடு
35
  சிவணிய தென்னை? செப்புக' எனலும், 40
     
 

அல்லியின் வரலாறு

 
     
  `வளர்பெரு நிதியோய்! வாழ்கநீ பெரும!
தளர்வுறும் நின்மனம் தகாநெறி ஒரீஇ
நல்வழிப் படர்க! நானிவண் உற்றது
செல்வக் கோவே செப்புவென் கேண்மோ!
 
  மகப்புனல் ஆட மயில்நகர் விடுத்துத்
தகப்பன் தடையைப் பொருட்படுத் தேனாய் 
45

---------------------------------------------------------------

  தத்தி - கிளி, வஞ்சி - பெண் (பூங்கொடி), பொறி - கருவி, மயல் - மயக்கம், ஆயிழை - ஆய்ந்தெடுத்த அணிகலனுடைய பெண் (பூங்கொடி), சிவணியது - பொருந்தியது, ஒரீஇ - நீங்கி.