| வருமெனை மறித்து வஞ்சகஞ் செய்தனன்; வெருகன் தன்னுரை முழுதும் மெய்யென நம்பிய என்பால் நலம்நுகர்ந் ததற்பின் | |
| வெம்பி அழிந்திட வீதியில் விடுத்துக் காணா தேகினன்; கலங்கஞர் எய்தி நாணி என்னூர் நண்ணே னாக, | 50 |
| | |
| அல்லி தந்தையின் அன்பு | |
| | |
| அழலோம் பாளன் அறநெறிச் செல்வன் பழமறை வல்லான் பார்ப்பன முதுமகன் | |
| தாயிலாக் குறையைத் தவிர்க்குந் தந்தை என்னைக் காணான் இரங்கிப் புலம்பித் தென்றிசைக் கடல்வரை தேடித் திரும்பி வருவோன் இங்கே உறுமெனைக் கண்`டிவண் எங்ஙனம் வந்தனை என்மகள்?' என்றே | 55 |
| பொங்கிய கண்ணீர் என்றலைப் பொழிந்து, பிழைமணம் பட்டுப் பெருநெறி பிழைத்து வழுவினேன் ஆயினும் வளர்மகப் பற்று நிறைந்தவன் ஆதலின் நீங்கி நடவான் புரந்திட எண்ணிப் பூசுரர் மனைதொறும் | 60 |
| இரந்துண வெடுத்தும் என்னைப் பேணினன்; | 65 |
| | |
| வைதிகக் கொடுமை | |
| | |
| ஆறாக் கவலை அரித்திட வருநோய் தீராத் துயரால் திரிவோன் ஒருநாள் அந்த ணாளர் மனைதனை அணுகிச் செந்தண்மை வேண்டிச் செயலிலான் நிற்கஅச் | |
| சேரி வாழுநர் சீறி `வைதிகம் | 70 |
--------------------------------------------------------------- |
| கலங்கஞர் - மிகுந்ததுன்பம், நண்ணேன் - பொருந்தேன், அழலோம்பாளன் - வேள்விசெய்வோன், பிழைமணம் - பிழைபட்ட திருமணம், புரந்திட - காத்திட, பூசுரர் - பார்ப்பனர், செந்தண்மை - கருணை. | |
| | |