| மாறி நடந்த மங்கை எம்அகம் குலவுதல் ஒவ்வோம் குலம்பழு தாயினள் விலைமகள் தந்தைநீர் வேதியர் தாமோ?' என்றெமை ஏசி இகழ்ந்தனர்; அதனால் | |
| | |
| குறளகம் புகுதல் | |
| | |
| நிறைநீர் விழியேம்; நெடுநகர் ஈங்கே | 75 |
| உறையுநர் கருணை உளமுளோர் இலரோ? புரக்குநர் இலோமெனப் புலம்புதல் கேட்ட அறத்து வழிப்படூஉம் நெஞ்சினன் ஒருவன் தாயினும் மேலாம் நோயுறும் தந்தை | |
| வீய்நிலை கண்டுளம் வெதும்பி இரங்கித் தோள்மிசைத் தழீஇத் தொண்டுளம் பூண்ட வாழ்நாள் உடையார் மலையுறை யடிகள்தம் குறளகம் தனிலெமைக் கொண்டுய்த் தனனே; | 80 |
| | |
| மலையுறை அடிகள் மாண்பு | |
| | |
| அவர் தாம் குறள்நெறி வாழும் கொள்கையர், அறிஞர் ஒழுக்கம் உயிரென ஓம்பும் செம்மல், வழுக்கியும் தீதுரை வழங்காப் பெரியார்; கல்வித் தொண்டே கடவுள் தொண்டெனக் கல்வி வளர்ந்திடக் கழகம் கண்டவர்; | 85 |
| பல்வகை நூல்பயில் படிப்பகம் நிறுவியோர் கவிஞர் பலருயிர் காத்தருள் வள்ளல் புவியில் மேம்படு புலவரின் புரவலர் மூடச் செயல்கள் மொய்த்துவந் துறுத்தலால் வாடிக் கிடக்கும் மங்கையர் வாழ்வில் | 90 |
--------------------------------------------------------------- |
| உறையுநர் - வாழ்பவர், அறத்துவழிப்படூஉம் - அறவழிநடக்கும், வீய்நிலை - அழியும்நிலை, தழீஇ - தழுவி, உய்த்தனன் - சேர்த்தனன், ஓம்பும் - பேணும். | |
| | |