பக்கம் எண் :

தாமரைக்கண்ணி தோன்றிய காதைபக்கம் : 47

  புத்தொளி வீச நத்தின ராகி
அரிவையர் மன்றம் அமைத்தவர், செல்வ!
95
     
 

குறளகத்தின் பணிகள்

 
     
  தம்பெரும் உழைப்புத் தருமுயர் நிதியும்
தம்பினும் அன்பால் தருபெரும் பொருளும்
குவித்துக் கண்டதே குறளகம்; அதுதான்
 
  தவிப்போர்க் கருளும், சாதியால் தாழ்நிலை
வகித்துளோர் தமக்கு வாழ்வினை நல்கும்,
அகத்தும் புறத்தும் அன்பே நிறையும்,
கசடறக் கற்றோர் கண்டநல் உண்மைகள்
திசைஎலாம் பரவத் தெளிதமிழ் நூல்கள்
100
  பற்பல ஆக்கிப் படைக்கும், அதாஅன்று
தமிழ்மொழி ஒன்றேஇத் தரணி ஆள
அல்லும் பகலும் அரும்பணி ஆற்றும்;
105
     
 

அடிகள் அடைக்கலம் அருளல்

 
     
  நல்லறம் எவைஅவை நயந்திடும் அவர்எம்
அல்லல் கண்டதும் அரும்பினர் கண்ணீர்
 
  துடைப்பேன் துயர்எனத் துடைத்தனர் அந்நீர்;
உடைப்பெருஞ் செல்வம் உற்றேன் போலக்
களித்தேன் தாயின் கருணையைக் கண்டேன்;
உளத்தே நிறையும் உவப்புடன் குறளகத்
தொண்டுகள் புரியும் தோகை இவளிடம்
110
  விண்டுளம் நண்பு கொண்டுளேன் யான்' என; 115
     
 

கோமகன் அகலுதல்

 
     
  `அல்லி! நின்வர லாறு தெரிந்தேன்
மெல்லியல் இவளை வஞ்சியின் துணையால்
அடைவென்' எனவுரைத் தகன்றனன் கோமகன்;
 

---------------------------------------------------------------

  நத்தினர் - விரும்பினர், தம்பினும் - தம்தம்பி, வகித்துளோர் - அடைந்துள்ளவர், கசடு - குற்றம், அதாஅன்று - அதுமட்டுமன்றி, தோகை - மயில் போன்ற பூங்கொடி, நண்பு - நட்பு.