| பூங்கொடியின் கடுமொழி | |
| | |
| படிப்பகம் விடுத்துப் பாவை போந்து | |
| `தடித்திடும் உளத்தன், தகவிலா நெறியன், காவா நாவினன், காமுகன், நல்லன மேவா வாழ்வினன், மெல்லியல் தம்பால் நிறையெனும் காவல் நிலைப்பதை அறியான், குறைமதி யாளன், கொடியன் ஒழிந்தனன்; | 120 |
| இத்தகு காமம் இல்லா தொழிக! இத்தகும் ஆடவன் இருந்திடப் பெறுமேல் பொல்லா நாடெனப் புகலுவர் மேலோர் நல்லாய் உணர்'எனப் பூங்கொடி நவில்வுழித் | 125 |
| | |
| தாமரைக்கண்ணி வருகை | |
| | |
| தாமரைக் கண்ணி தண்மலர்க் காவுள் | |
| வருவோள் `தமிழ்மொழி வாழ்க! வாழ்க! வருவோர் எவர்க்கும் வணங்காத் தமிழே! உலக மொழியுள் உயர்ந்தாய் என்கோ! அலகிலாக் காலங் கண்டாய் என்கோ! சங்கம் வளர்த்தாய் சான்றோர் பலரால் | 130 |
| பொங்கும் புகழ்நூல் பூண்டாய் என்கோ! ஆயிரம் பகைதாம் ஆர்ப்பரித் துறினும் தூவென இகழ்ந்து தோள்வலி காட்டி எழிலர சோச்சும் தமிழே என்கோ! கடல்பொங் கலையில் கறையான் வாயில | 135 |
| சுடர்எரி நாவில் சுழிபடும் ஆற்றில் தப்பிப் பிழைத்த தமிழே என்கோ! | 140 |
| | |
| கோமகன் அகலுதல் | |
| | |
| `அல்லி! நின்வர லாறு தெரிந்தேன் மெல்லியல் இவளை வஞ்சியின் துணையால் அடைவென்' எனவுரைத் தகன்றனன் கோமகன்; | |
--------------------------------------------------------------- |
| காவா - காவாத, மேவா - பொருந்தாத, மெல்லியல் - பெண்கள், நிறை - கற்பு, நவில்வுழி - சொல்லுமிடத்து, என்கோ - என் பேனா?, தூ - இகழ்ச்சிக்குறிப்பு, எரிநா - தீச்சுடர். | |
| | |