பக்கம் எண் :

தாமரைக்கண்ணி தோன்றிய காதைபக்கம் : 49

  உன்னுயர் பெருமை உரைத்திட ஒருநா
தன்னால் இயலேன்' எனஅத் தையல்
 
     
 

அந்தி வந்தது

 
     
  பாடின ளாகப் பையென மாலை  
  கூடிவந் துற்றது; கூடடை பறவை,
மணியொலி கேளா மாணவச் சிறுவர்
அணியணி யாக ஆர்ப்பது போலப்
பலபட இரைந்தன பசுமரந் தோறும்;
குலவிய தம்பணி ஆற்றிய கொழுநர்
145
  அயர்வொடு வருவரென் றதனை ஆற்றிட
நகைமுக மாதரார் வழிவழி நோக்கினர்;
நாடொறும் பயிலும் நங்கையர் பாட்டொலி
மாட மிசைதொறும் மலர்ந்து பரந்தன;
கால்விரல் சதிசொலக் கைவிரல் மொழிசொல
150
  நூலிடை நுடங்க நுதல்வியர் வரும்ப
நீள்சடைப் பின்னல் நெளிந்துபின் துவளப்
பாவையர் ஆடல் பயிலும் அரங்கில்
மேவிய ஒலியும் மிடைந்து பரந்தன;
முழவொலி யாழொலி முடுகி எழுந்தன;
155
  குழலியர் முன்றில் கோலஞ் செய்தனர்;
ஆவலொடு திரும்பும் ஆவினங் கண்டு
தாவின கன்றுகள்; தளிர்விரல் மாதரார்
வீடுகள் தோறும் விளக்கெடுத் தனரால்;
ஆடிடுஞ் சிறுவர் ஆசாற் காண்டலும்
160
  பாடொலி அடங்கிப் பதுங்குதல் என்ன
வகைவகைப் புள்ளினம் வாயொலி ஒடுங்கிப்
165
  புகுந்திட அந்திப் பொழுதுவந் ததுவே. 167
     
 

அடிகள் அடைக்கலம் அருளல்

 
     
  நல்லறம் எவைஅவை நயந்திடும் அவர்எம்
அல்லல் கண்டதும் அரும்பினர் கண்ணீர்
 
  துடைப்பேன் துயர்எனத் துடைத்தனர் அந்நீர்;
உடைப்பெருஞ் செல்வம் உற்றேன் போலக்
களித்தேன் தாயின் கருணையைக் கண்டேன்;
உளத்தே நிறையும் உவப்புடன் குறளகத்
தொண்டுகள் புரியும் தோகை இவளிடம்
110
  விண்டுளம் நண்பு கொண்டுளேன் யான்' என; 115
     
 

கோமகன் அகலுதல்

 
     
  `அல்லி! நின்வர லாறு தெரிந்தேன்
மெல்லியல் இவளை வஞ்சியின் துணையால்
அடைவென்' எனவுரைத் தகன்றனன் கோமகன்;
 

---------------------------------------------------------------

  பையென - மெதுவாக, அயர்வு - சோர்வு, பரந்தன - பரவின, துவள - அசைய, மிடைந்து - நெருங்கி, முடுகி - விரைந்து.