பக்கம் எண் :

பக்கம் :50

 

6. கல்லறை காண் காதை

 
 

நிலவும் உடுவும்

 
     
  மாலைப் பொழுதில் மேலைத் திசையில்
நீலப் பச்சை கோலச் சிவப்பு
மஞ்சள் முதலா வண்ணங் குழைத்துச்
செஞ்சுடர்ப் பரிதி சென்றனன்; இரவெனும்
 
  ஓவியன், மாதர் ஒளிமுகந் தீட்ட
நீல வான நெடுந்திரை தன்னில்
கோல வட்டம் குறித்தனன், அதனை
ஞாலம் நிலவென நவின்று மகிழ்ந்தது;
நுதலிற் புரளும் சுருள்குழல் வரைய
5
  நுதலி ஒருபுறம் நுண்ணிதின் வரைந்தனன்;
களங்கப் பட்டது கண்டனன் நெஞ்சம்
துளங்கிக் கனன்று தூரிகை வீசி
உதறினன்; கிண்ணம் ஒன்றனிற் பட்டுச்
சிதறிய வெண்ணிற வண்ணம் சிரித்திட
10
  அதனை உடுவென அறைந்தனர் உலகோர்;
வண்ணஅவ் வுடுக்களும் வட்ட நிலவும்
கண்ணுங் கருத்தும் களிமிகப் பொழிலகம்
வெண்ணிறங் கொள்ள ஒளிக்கதிர் வீசின;
15
     
 

தாமரைக்கண்ணி வினவல்

 
     
  அவ்விடை அவண்வரும் ஆரணங் காகிய  
  செவ்விய நெஞ்சினள் திருநிறை செல்வி
பொதுப்பணி பலநாள் புரிந்து துயர்பல
20

---------------------------------------------------------------

  பரிதி - கதிரவன், ஞாலம் - உலகம், குழல் - கூந்தல், நுதலி - கருதி, துளங்கி - கலங்கி, கனன்று - சினந்து, தூரிகை - எழுதுகோல், உடு - விண்மீன், அறைந்தனர் - கூறினர்.