| விருப்புடன் ஏற்றவள் விடுதலை வேட்டவள் தாமரைக் கண்ணி தமிழ்மொழி வாழ்த்திப் பூமலர் மேனிப் பூங்கொடி தன்னொடு | |
| நின்றிடும் அல்லி நிலாமுகம் நோக்கி, `நின்றீர் நுமக்கு நேர்ந்தது யாது?'என நிலாமுக அல்லி நிகழ்ந்தது கூறலும், | 25 |
| | |
| தாமரைக்கண்ணி அறிவிப்பு | |
| | |
| `கோமகன் ஆயிழை இவள்மேற் கொண்ட காமந் தணிந்து கழித்தனன் அல்லன்; | |
| படிப்பகம் இதனுள் பழுதுகள் புரியின் அடுத்தவர் ஒறுப்பர் ஆதலின் புறத்தே வருமிடைக் காண்பான் வழியிடை ஒதுங்கி இருத்தலுங் கூடும் இதுநீர் ஓர்ந்து திருத்தகு நல்லீர், தெருவழிச் செல்லேல் | 30 |
| பொழிலின் பின்புறம் பொருந்திய ஒருசிறு வழியுள தவ்வழி மருங்கிற் செல்லின் சுடுகா டொன்று தோன்றும்; ஆண்டுக் கடுநவை உறாஅது; கலங்கேல், அந்நெறி தாண்டிச் செல்'கெனத் தாமரைக் கண்ணி | 35 |
| வேண்டி நின்றனள்; விளங்கிழை அல்லி | 40 |
| | |
| அல்லி அஞ்சுதல் | |
| | |
| `பிணஞ்சுடு காட்டில் பேயினங் குழுமி நிணங்கொளத் திரிதலால் கொடுந்துயர் நேர்ந்திடும் யாங்ஙனம் செல்லுகேம்? யாருந் துணையிலேம்! பாங்குற நன்னெறி பகருதி' என்றனள்; | |
--------------------------------------------------------------- |
| ஒறுப்பர் - தண்டிப்பர், ஓர்ந்து - உணர்ந்து, மருங்கு - பக்கம், கடுநவை - கொடிய தீங்கு, உறாஅது - நிகழாது, நிணம் - கொழுப்பு, பகருதி - சொல்லுவாய். | |
| | |