பக்கம் எண் :

பக்கம் :52பூங்கொடி

 

தாமரைக்கண்ணி தெளிவுபடுத்துதல்

 
     
  `பேயென ஒருபொருள் உண்டெனப் பேசுதல்
ஆயிழை! பேதமை ஆகும் அறிகதில்!
மனவலி மிக்கார் மருளார்; இருளில்
மனவலி குறைந்தார் மருளுவர்; ஆதலின்
கட்படு பொருளெலாம் கருநிறப் பேயாய்
45
  முற்படும், வாய்சொல் மொழிதடு மாறும்,
செயலறச் செய்யும், வியர்வுறும், நடுக்குறும்,
மயலுறக் கண்ணொளி மங்கிட இருளும்,
அச்சம் நெஞ்சில் அறையும், அதுதான்
பேயென உலகம் பேசும்; உரமுளார்
50
  ஆயும் அறிவுளார் அஞ்சார் ஆதலின்
இவ்வழி நீவிர் ஏகுதிர்! ஏகின்
செவ்விய நெஞ்சுரம் சேரும் நுமக்' கெனக்
55
     
 

முத்தக்கூத்தன் கல்லறை

 
     
  `கலக்கந் தருசுடு காட்டில் நெஞ்சுரம்
சேருவ தெங்ஙனம்? செப்புதி' எனலும்,
 
  `கூறுவென் கேண்மின் கூர்மதி யுடையீர்!
மொழிக்குயிர் ஈந்தநல் முத்தக் கூத்தன்
பளிக்கறைப் புதைகுழி பாங்குடன் மிளிரும்,
அதனைக் காணின் அச்சம் தொலையும்,
மதமுறு கொடியர் மனச்செருக் கொழிக்க
60
  நெஞ்சுரம் ஏறும்; நிமிர்ந்து நடப்பீர்!
வஞ்சனை மாக்கள் வண்டமிழ் மொழிக்கு
நஞ்சினை ஊட்ட நாட்டில் மறைந்துளார்;
65

---------------------------------------------------------------

  ஆயிழை - அல்லி, கட்படு - கண்ணில் தோன்றும், அறையும் - அடிக்கும், ஏகுதிர் - செல்வீர், கேண்மின் - கேளுங்கள், கூர்மதி - கூரிய அறிவு, பளிக்கறை - பளிங்கு அறை, மதமுறு - ஆணவம் கொள்ளும், கொடியர் - கொடியவர்.