பக்கம் எண் :

கல்லறை காண் காதைபக்கம் : 53

  அவர்தம் கொடுஞ்செயல் அழித்திட வேண்டின்
முத்தக் கூத்தன் கல்லறை முன்போய்
 
  நத்தித் தொழுதால் நரம்புரம் ஏறும்,
குருதியில் உணர்ச்சி கொதிக்கும், நும்மினப்
பெருமையை அழிப்போர் பிறக்கிடச் செய்வீர்!
நாடும் மொழியும் நலம்பெற வேண்டிக்
கூடும் நீவிர் கூத்தன் செயற்றிறம்
70
  பூணுதல் வேண்டும் பூவையீர்! ஆதலிற்
காணுதல் வேண்டுமக் கல்லறை' என்றனள்;
75
     
 

முத்தக் கூத்தன் வரலாறு கூறுதல்

 
     
  `நல்வழி புகன்றோய்! நன்றி யுடையேம்
கல்லறை புகுந்த காளைதன் திறம்எமக்கு
அருளுதல் வேண்டும் ஆயிழை' எனலும்,
 
  `பிறைநுதல் நல்லீர்! பெட்புடன் கேண்மின்! 80
     
 

பிறமொழி புகுதல்

 
     
  நம்நாட் டகத்தே நயமிலாப் புன்மொழி
திணிப்பதற் கொருசிலர் செய்தனர் சூழ்ச்சி;
துணுக்குற் றெழுந்தனர் தூயநல் மனமுளோர்;
தாய்மொழி வளர்ச்சி தளர்ந்தஇந் நாட்டில்
 
  நோய்என மடமை நுழைந்து பரந்தது;
எழுத்தும் அறியார் படிப்பும் உணரார்
கழுத்திற் பிறமொழி கட்டுதல் நன்றோ?
என்றநல் லுரையை இகழ்ந்தனர் ஆள்வோர்;
85
     
 

நெஞ்சங் கனன்றது

 
     
  கன்றிய நெஞ்சங் கனன்றது; தமிழர்  

---------------------------------------------------------------

  குருதி - இரத்தம், பிறக்கிட - புறமுதுகிட, பூவையீர் - பெண்களே, காளை - முத்தக்கூத்தன், ஆயிழை - தாமரைக்கண்ணி, கேண்மின் - கேளுங்கள், துணுக்குற்று - அச்சமுற்று.