பக்கம் எண் :

பக்கம் :54பூங்கொடி

  பொறுக்கும் அளவே பொறுப்பர்; மீறின்
ஒறுத்ததன் பிறகே ஓய்வும் உணவும்
நினைவர்; இதுதான் நெடுநாள் இயல்பு;
கனலும் புனலும் கரைமிகின் தடுக்க
உலகில் ஒருபொருள் உளதென அறியோம்;
90
     
 

மான வுணர்ச்சி

 
     
  மூக்கினை வருடின் மூங்கையும் சினப்பான்;
காக்கும் உயிரினும் மேம்படு கனிமொழி
தாய்மொழி யதனைத் தகவிலார் குழுமி
ஆய்வஞ் சனையால் அழிக்க முனையின்
ஊமையிற் கீழாய் உறங்கிக் கிடப்பரோ?
95
     
 

அறப்போர்

 
     
  போர்ப்படை திரண்டது போர்ப்பறை ஆர்த்தது;
கோற்படை வீரரைக் குவித்தனர் அரசினர்;
அஞ்சிலர் நெஞ்சில் ஆண்மை ஏறினார்
வஞ்சினம் சாற்றினர் வாகை சூடவே;
மானம்மீக் கூர்ந்தவர் மறியல் செய்தனர்;
100
  கூனல் நெஞ்சினர் கொடுங்கோல் செலுத்தினர்;
அடித்தனர் துரத்தினர், அடவி நாப்பண்
துடித்திடக் கொண்டுபோய் விடுத்தனர்; புலிவாய்
தப்பிப் பிழைத்துத் தாய்மார் பல்லோர்
அப்பணி மீண்டும் ஆற்றினர்; அவர்தமைக்
105
  கொடுஞ்சிறைக் கூட்டுள் கொடுங்கோல் அடைத்தது; 110
     
 

குருதி சிந்தினர்

 
     
  தொடும்பணி எதையும் துணிவுடன் ஆற்றக்  

---------------------------------------------------------------

  கனல் - தீ, புனல் - நீர், கரைமிகின் - எல்லை கடந்தால், மூங்கை - ஊமை, கோற்படை - ஊர்காவலர், மீக்கூர்ந்தவர் - மேம்பட்டவர், கூனல் - குறுகிய, அடவி - காடு, நாப்பண் - நடுவில்.