பக்கம் எண் :

கல்லறை காண் காதைபக்கம் : 55

  கடும்புயல் என்னக் கனன்றெழும் காளையர்
கொடியுடைக் கையர் கூடி எழுந்தனர்;
தடியடி தாங்கினர் தரையிற் செந்நீர்
 
  சிந்தினர் மொழிப்பயிர் செழிப்பான் வேண்டி;
குருதி கண்டும் உறுதி குலைந்திலர்
முறுகி எழுந்தனர்; மூண்டெழும் மக்கள்
உணர்ச்சியும் அதனோ டுள்ளெழும் எண்ணமும்
பணத்திமிர்க் கடங்கும் பான்மைய அலவே!
115
     
 

சிறையும் சிந்தையும்

 
     
  கிளர்ந்தெழு வீரரைக் கொடுஞ்சிறைக் கிடத்தின்
தளர்ந்திறும் புரட்சிஎன் றுளந்தனிற் கொண்டோர்
சிறையகந் தொறுமிடம் இலாமல் அடைத்தனர்;
சிறையகம் வீரர்தம் சிந்தையை அழிக்குமோ?
குறைமதி யாளர்தம் கொள்கை அஃதாம்;
120
  சிறையகம் போலச் சிந்தனை வளர்க்கும்
உறைவிடம் மற்றொன் றுலகில் உளதோ?
எண்ணமும் கருத்தும் எலியோ? பொறியுள்
நண்ணிய பின்னர் நசுக்க ஒல்லுமோ?
125
     
 

உண்ணா நோன்பு

 
     
  எண்ண இயலா இளைஞர் தம்முள்  
  உண்ணா நோன்பினை ஒருவன் மேற்கொள
அஞ்சிய அரசினர் அதட்டினர் அவனை;
நஞ்சையும் கொள்கைக்கு நயந்துண் டோர்பலர்
காட்டிய நெறிகள் கண்டோ னாதலின்
ஊட்டிய உணவை உமிழ்ந்தனன் மேலோன்;
130
  உயிர்பெரி தன்றே! உயர்ந்தது கொள்கை!
அயரினும் இவ்வுணா அருந்தேன் என்றனன்;
அடித்தனர் அவனை, அருந்தேன் என்றனன்;
135

---------------------------------------------------------------

  செழிப்பான் - செழிக்க, இறும் - அழியும்.