| அடித்தனர் அவனை, அஞ்சேன் என்றனன்; அடித்தனர் அடித்தனர் அடித்தே கொன்றனர்! | |
| | |
| முத்தக் கூத்தன் கொலை | |
| | |
| அந்தோ அந்தோ! ஆவி துறந்தனன்; நொந்தஅப் பிணத்தை மூடிய கல்லறை சுடுகாட் டாங்கண் தோன்றும்; அதுதான் உடுவான் நிலவால் ஒளிபெற் றிலங்கும்; சித்தம் கலங்கேல், அதன்முன் செல்லின் | 140 |
| முத்தக் கூத்தன் முழுவலி வாய்க்கும்'என் றுரைத்ததற் பின்னர் ஒள்ளிழை மேலும் | 145 |
| | |
| பூங்கொடி கடல்நகர் செல்ல இசைதல் | |
| | |
| `இசைத்துறை வல்லாய்! இரைகடல் நாப்பண் கடல்நகர் என்னும் ஒருநகர் உளதவண் மடமையில் மூழ்கிய மக்கள் மலிந்துளார்; | |
| அப்பெரும் மடமை அகற்றுதல் வேண்டும் ஒப்பிலா நீயும் உடன்வர இசைவு தருதி' என்றனள் தாமரைக் கண்ணி; உவப்புடன் பூங்கொடி ஒப்புதல் தந்து சவக்குழிக் கல்லறை சார்வுறும் வழியே | 150 |
| அல்லிபின் தொடர ஏகினள் அவளே. | 155 |
--------------------------------------------------------------- |
| ஒள்ளிழை - தாமரைக்கண்ணி, இரைகடல் - ஒலிக்கும் கடல். | |
| | |