பக்கம் எண் :

பக்கம் : 57

 

7. கடல்நகர் புக்க காதை

 
 

கோமகன் துயிலாமை

 
  மலர்மலி காவுள் மங்கை பூங்கொடியின்
அலர்விழி அருளும் அந்தீங் கிளவியும்
பெறாஅது கோமகன் பெயர்ந்தோன் அக்கொடி
மறாஅது தன்னை மணங்கொள வழிவகை
 
  உன்னி உன்னி உறங்கா திருந்தனன்;
கன்னியர் நினைவுறின் கண்படை ஒல்லுமோ?
5
     
 

கதிரவன் எழுச்சி

 
     
  இருளின் கால்சீய்த் தெழுந்தனன் பரிதி;
மருள்கெட மக்கள் இமைகள் மலர்ந்தனர்;
தெருள்நிலை கண்டனர்; தேய்ந்த உணர்வெலாம்
 
  புதுநிறை வெய்தப் பூரித் தெழுந்தனர்;
கோமகன் ஒருவனோ கொடுந்துயர்ப் படுத்தும்
காமங் கதுவக் காலையின் எழுச்சி
அறியா னாகி அயர்ந்து கிடந்துழித்
10
     
 

கோமகனுக்கு அறிவுரை

 
     
  தாமரைக் கண்ணி தனிமையில் அணுகி  
  `நின்போற் செல்வர் நெறிதடு மாறி
வன்பாய்ப் புகுதல் வரன்முறை யாமோ?
மொழிவளம் பெறவும் மூடச் செயலால்
இழிநிலை யுற்றோர் எழுச்சி பெறவும்
தொண்டுகள் ஆற்றும் தூயவள், இல்லறம்
15
  பெண்டுகட் குரித்தெனப் பேசினும் பூங்கொடி 20

---------------------------------------------------------------

  அந்தீம்கிளவி - அழகிய இனியசொல், பெறாஅது - பெறாமல், பெயர்ந்தோன் - சென்றவன், மறாஅது - மறுக்காமல், உன்னி - நினைத்து, கண்படை - உறக்கம், கால்சீய்த்து - அழித்து, தெருள் - தெளிவு, கதுவ - பற்ற, வன்பாய் - வன்முறையாகி.