சிறியர் செய்கை |
|
| கற்களை வீசினர் காரிருள் இடைநின் றற்பச் செயலென அறியார்; அறிஞர் நெஞ்சிற் பதிந்த கருத்துரை நிலமிசை | |
| விஞ்சிப் படர்வதை விரும்பாச் சிறியர் | 95 |
| புன்மைச் செயல்செயப் புறப்படல் படரிருள் புன்மைக் கணத்தைப் புறங்காட் டச்செயும் கதிரோன் தன்னைக் கையால் மறைக்கும் மதியோர் செயலினை மானும்; அந்தோ! | |
| | |
| பூங்கொடியின் கனன்றுரை | |
| | |
| கற்கள் வீழலும் கண்கள் சிவந்தனள் | 100 |
| `எற்கெனை அழைத்தீர் இகழ்வதற் கோ?'என நுவன்றனள் ஒருகல் நுதற்படச் செந்நீர் சிந்திச் சிவந்தன மேடையும் ஆடையும்; கனன்றனள் சொல்லினைக் கனலெனச் சிந்தினள்; | |
| பெண்மையில் ஆண்மை பிறத்தலுங் கூடும் | 105 |
| உண்மை உணர்த்தினள் ஊரினர்க் கவ்விடை; `சான்றீர் பெரியீர் சாற்றுவென் கேண்மின்! ஆன்ற பெரும்புகழ்த் தமிழின் அருமை கேடுறல் நன்றோ? கிளைபோல் வருமொழி | |
| பீடுறல் கண்டும் பேதமை பூணல் | 110 |
| மாண்பன் றென்றேன், மடமைச் சேற்றில் வீழ்ந்து மடிதல் வேண்டா என்றேன், தாழ்வும் இழிவும் சாதியில் வேண்டா! குலமும் தேவும் ஒன்றெனக் கொள்க; | |
| நலந்தரும் இவைஎன நவின்றேன், ஈண்டை | 115 |
| ஏற்போர் உளரேல் ஏற்று வாழ்க! ஏலா ராயின் இவணின் றொழிக! | |
--------------------------------------------------------------- |
| கார் - கருமை, எற்கு - எதற்கு, நுவன்றனள் - சொல்லினள், சாற்றுவென் - சொல்லுவேன், ஆன்ற - நிறைந்த, கிளை - உறவு, பீடு - பெருமை, தேவு - தெய்வம், உளரேல் - இருப்பாராயின். | |
| | |