பக்கம் எண் :

பக்கம் :62பூங்கொடி

சொற்போர் புரிக

 
  பிழைஎனப் படுமேல் பேசுக அரங்கில்
கழைஇனி தென்றேன் கசக்குமென் பீரேல்
 
  சான்றுடன் நிறுவுக, சால்பது வாகும்; 120
  நான்தரு கருத்தினை மறுத்துறை நவிலுதல்
அறிவோர் கொள்கை; அதனை விடுத்துச்
சிறியோர் செயல்செய முனைதல் நன்றோ?
திறமிலார் செயலெதும் திருந்திய கொள்கை
 
  உரமுளார் போக்கினை ஒதுக்குதல் இல்லை; 125
     
 

ஞாலத்து இயற்கை

 
     
  நல்லன செய்வோர்க்கு நலிவே தருதல்
மல்லன்மா ஞாலத் தியற்கையே யாகும்;
உலகுக் குழைக்கும் உத்தமர் தம்மைச்
சிலுவையில் அறைந்தும் சிறையினில் அடைத்தும்
 
  கொலைத்தொழில் புரிந்தும் குண்டுகள் பாய்ச்சியும் 130
  நஞ்சுணச் செய்தும் நலிவுகள் தந்தும்
நன்றி கொன்றிடும் நல்லதோர் உயர்குணம்
இன்றுநம் மிடையே இறுகப் பிணைந்தது;
ஆதலின் இச்செயல் ஆற்றத் துணிந்தீர்!
 
     
 

பூங்கொடி துணிபு

 
     
  சாதல் உறுதி, சதைபடு இவ்வுடல்135
  கழுகு பருந்துகட் குணவாய்க் காட்டில்
அழுகிக் கிடக்கும், அத்தகு நிலையுடல்
என்னின மக்கள் எறிகல் பட்டுச்
செந்நீர் சிந்திச் செந்தமிழ் காக்க
 
  மாய்தல் பெறின்நான் மனங்கொள ஏற்பேன்; 140

---------------------------------------------------------------

  கழை - கரும்பு, நிறுவுக - நிலை நாட்டுக, சால்பு - தக்கது, நலிவு - துன்பம், மல்லல் - வளப்பம்.