8. கடல்நகரில் தங்கிய காதை. |
நகரத்தார் வேண்டுதல் |
|
| தாமரைக் கண்ணி தன்னொடு வந்த தோமறு பூங்கொடி தூயநல் லுரையால் திருந்திய மனத்தினர் திரள்கொடு வந்தே, `இருந்திடல் வேண்டும் இன்னும் சின்னாள் | |
| நின்னுரை கேட்டோர் நேரிய ராகிப் | 5 |
| புன்முறை நீங்கிப் புந்தி தெளிந்து மல்கிருள் அகல மதியொளி பெற்று நல்லுணர் வெய்தி நலம்பெறல் திண்ணம் ஆதலின் நங்காய்! அருளுதி, நின்னகர்ப் | |
| போதல் ஒழிமதி!' எனுமுரை புகன்றனா | 10 |
| | |
| இசைவு தருதல் | |
| | |
| பக்கல் நிற்கும் கண்ணியைப் பார்த்தனள் அக்கொடி தன்னுளம் அறிந்தவ ளாதலின் தோமறு பணிசெயத் தூயவ ளாகிய தாமரைக் கண்ணி தந்தனள் இசைவே; | |
| ஆண்டிருந் தேகி அணிமலர்க் கண்ணி | 15 |
| மீண்டனள் மணிநகர்; மெல்லியல் அல்லி | |
| | |
| அல்லி வினவல் | |
| | |
| ஈண்டிய அன்புளத் தெழிற்பூங் கொடியைக் காண்டல் விருப்பொடு கடுகி வந்தனள்; தோழியைக் காணாள் துயர்படர் நெஞ்சினள் | |
| `ஆழி நடுநகர் ஆங்கண் சென்றீர்! | 20 |
| நீயோ தமியள் நின்றிடல் கண்டேன்! | |
| | |
--------------------------------------------------------------- |
| தோமறு - குற்றமற்ற, திரள்கொடு - திரளாக, நேரியர் - நல்லவர், புன்முறை - தீயவழி, புந்தி - மனம், மதி - அறிவு, ஒழிமதி - தவிர்க்க, கண்ணி - தாமரைக்கண்ணி, ஈண்டிய - நிறைந்த, தமியள் - தனித்தவளாய். | |
| | |