பக்கம் எண் :

கடல் நகரில் தங்கிய காதைபக்கம் : 67

  வீடுகள் தோறும் விருந்துக் கழைத்தனர், 70
  கேட்போர் பலராய்க் கிளைத்தனர் பல்கினர்,
வேட்போர் தொகையும் மிகவாய்த் திரண்டன,
ஒன்றே குலமெனும் உணர்வு விரிந்தது;
நன்றே செய்தனள் நம்முயர் தலைவி
 
  என்றே தொழுதனர் இசைத்தனர் அவள்புகழ்; 75
  உள்ளம் பொய்யா துழைப்பவர் எண்ணம்
எள்ளள வும்பிழை ஏலா தீண்டெனும்
 
  கொள்கை நிலைத்திடச் செய்தனள் கொடியே. 78

-------------------------------------------------------------

  வேட்போர் - விரும்புவோர், கொடி - பூங்கொடி.