9. திருக்குறள் கற்றுத் தெளிந்த காதை |
நாவலர் வருகை |
|
| அந்நகர் மக்கள் அறியா மையிருள் வெந்நிட அறிவொளி விரித்தெழு செஞ்சுடர்ப் பரிதி என்னப் பாவை விளங்க, உரிமை வேட்கையும், உன்னும் பண்பும், | |
| உன்னிய தஞ்சா துரைக்கும் உரனும், | 5 |
| முன்னூ லாகிய முத்தமிழ் வகைக்கும் விரித்துறை திறனும், வியனுறு குறள்நூல் உலகெலாம் பரவ உழைக்கும் செயலும், உடையார் அறிவுப் படையார் ஒருவர் | |
| நடையால் உயர்ந்த நாவலர் அந்நகர் | 10 |
| வருமவர் பூங்கொடி வந்துள தறிந்து பெரும்பே ராசான் அருங்குண அறிஞர் திருமா மகளைத் தேடி வந்தனர்; | |
| | |
| பூங்கொடி நிகழ்ந்தன கூறல் | |
| | |
| வணங்கினள் தொழுதனள் வாழ்த்தினள் எழுந்து | |
| மணங்கமழ் மாலை சூட்டிப் `பெரியோய், | 15 |
| நின்மொழி ஏற்று நெடுநாள் பயின்று மன்னிய குறள்நூல் மாசறத் தெறிந்தேன்; குறளகம் கண்டார் குமணன் போன்றார் அருளறம் பூண்டார் மலையுறை யடிகள் | |
| அவர்தம் துணையால் அறிவொளி பெற்றேன்; | 20 |
| உவர்நீர்க் கடல்நகர் உவந்தீண் டுற்றேன், மொழியுணர் வூட்ட முனைந்தேன், சிலரால் பழியுரை பெற்றேன், பகுத்தறி வில்லான் | |
--------------------------------------------------------------- |
| வெந்நிட - புறமுதுகிட, உரன் - வலிமை, நடையால் - ஒழுக்கத்தால், உவர்நீர் - உப்புநீர். | |
| | |