பக்கம் எண் :

பக்கம் :70பூங்கொடி

 

நாவலரின் முன்னை நிகழ்ச்சி

 
     
  யான்புரி அலுவலில் ஏன்விலக் குற்றேன்?
மீன்புலி கயலால் மேம்படு தமிழக
 
  விடுதலை குறித்து விளிம்பினேன்; தமிழ்மொழி 50
  கெடுதலை இன்றிக் கிளந்தெழப் புகன்றேன்,
இவையே யான்செய் தவறென இயம்பி,
நவைஎனப் பழிஎன நாணார் விலக்கினர்;
 
 

நாவலர் ஊக்கமூட்டல்

 
  மதுப்பூங் குழலி! `மாநிலத் தித்துயர்  
  பொதுப்பணி புரிவோர்க்குப் புதுவ தன்றே! 55
  விதுப்புறேல் நின்பணி வீறுற் றோங்கும்'
என்றவர் ஊக்கினர்; இவ்வுரை கேட்டாள்;
`நன்றுநன் றைய! நான்அய ரேன்இப்
பணியே உயிராப் பாரில் கொண்டுளேன்;
 
 

உலகியல் நிலைமை

 
  உலக மாந்தர் நிலைதான் என்னே! 60
  நிலையிலாக் கொள்கை, நேர்மை இன்மை
கலையெனக் கொண்டனர்; கருதின் ஒருநாள்
பெரியார் அறிஞர் என்றெலாம் பேசுவர்;
மறுநாள் மாறி `மதியே இல்லார்,
 
  சிறியார்' எனப்பழி செப்புவர் அந்தோ! 65
     
 

தொண்டர்தம் பெருமை

 
     
  நல்லன செயலே நாளும் ஆற்றும்
வல்லமை பூண்டு வழுவிலாக் குறள்நெறி
பரப்பிக் கடவுட் பள்ளியில் பைந்தமிழ்
சிறக்கப் பணிபுரி சீரியோர் மலையுறை
 

---------------------------------------------------------------

  கிளர்ந்தெழ - வளர, நவை - குற்றம், புதுவது - புதியது, நாணார் - நாணம் இலராய், விதுப்புறேல் - அஞ்சாதே.