பக்கம் எண் :

தொல்காப்பியம் உணர்ந்த காதைபக்கம் : 73

  செந்தமிழ் காக்க வந்தவள் என்மகள், 20
  எந்த இடும்பையும் ஏற்றிட வல்லாள்,
பகைஎறி வடிவேல் பைந்தமிழ் காக்கும்
குகைவதி புலிபெறு குலக்கொடி அவளாம்,
அவன்வழி வந்தவள் அஞ்சாள் பகையைக்

 
  கவண்விடு கல்லால் கலங்குதல் செய்யாள், 25
  என்று தேறினள்' எனுமுரை கேட்டு
நின்றவள் `என்தாய் வாழிய' என்றனள்;
 
 

கோமகன் நிலைமை

 
  `குலக்கொடி இன்னுங் கூறுவென் கேட்டி!
கலக்குறு நெஞ்சினன் காமம் விஞ்சிய
 
  கோமகன் சிலரொடு குழுமி ஆங்கண் 30
  பாமக னாகிய பாவலன் பெயரால்
படிப்பகம் நிறுவிப் பணிபூண் டொழுகினன்;
உடைப்பெருஞ் செல்வன் ஆதலின் ஊரார்
தடைக்கல் இட்டிலர்; தமிழின் பெருமை
 
  முடுக்குகள் தோறும் முழங்குதல் கண்டேன்' 35
  எனுஞ்சொற் கேட்டுளம் எழுச்சி கூர்ந்து
மனங்கொளும் மகிழ்வின் வாழ்த்தினள் பூங்கொடி;
 
 

பொதுப்பணி வேடர்

 
  `இருஇரு செல்வி! இளையோன், தமிழ்க்குப்
புரிபணி உளத்தில் பூத்த தன்றே!
 
  தந்நலம் வேண்டும் தணியா ஆர்வலர் 40
  பொதுநலம் புரிவோர் போலப் பேசுவர்;
மதுநலங் கண்ட வண்டென மக்களும்
மதிமயக் குற்று வாழ்த்தொலி எழுப்புவர்;
புதுநிலை எய்துவர் புகழ்பொது மக்களால்;
 

---------------------------------------------------------------

  இடும்பை - துன்பம், வதி - தங்கும், கூர்ந்து - மிகுந்து, இளையோன் - கோமகன், ஆர்வலர் - ஆவலுடையவர்.