| மேனிலை எய்தலும் மிதிப்பர்அம் மாந்தரை; | 45 |
| நானிலம் இவ்வணம் நடந்திடல் கண்டோம்; | |
|
கோமகன் வஞ்சகப் பணி |
|
| இளையோன் றானும் இவ்வழி செல்லும் உளமே உடையோன், தன்னலம் ஒன்றே குறியா வைத்துக் குழைந்து பொதுப்பணி | |
| புரிவோன் ஆயினன், பூங்கொடி நின்னை | 50 |
| வஞ்சித் திருந்து வதுவை புரிதலை நெஞ்சத் தழுத்தி நின்றனன் காணுதி! தமிழ்ப்பணி எனின்நீ தலைபணி வாய்என மனப்பால் குடித்து மகிழ்ந்தனன்' என்றனள்; | |
|
பூங்கொடி வருந்துதல் |
|
| `ஐயகோ தமிழே! ஐயகோ தமிழே! | 55 |
| செய்ய தொண்டுளம் சிலரே கொண்டனர்; உன்பெயர் சொல்லித் தந்நலம் நுகர்வார் நின்னலம் சிறிதும் நினையார் உளரே' என்றுளம் ஏங்கி இனைந்தனள் இளங்கொடி; | |
| | |
| தாமரைக்கண்ணி அறிவுரை | |
| | |
| `இன்று பொதுப்பணி எளிதென எண்ணேல் | 60 |
| உள்ளமும் உயிரும் உணர்வும் தமிழென உள்ளுவோன் எவனோ அவனே தமிழன்! தமிழ்தமிழ் என்றுரை சாற்றுவோர் எல்லாம் தமிழ்காப் போரென நினைப்பது தவறு; | |
| | |
| இருவகைப் பகை | |
| | |
| பொதுப்பணி புரிவோய்! புந்தியில் ஒன்றுகொள் | 65 |
| எதிர்ப்படு பகையை எளிதில் வெல்லலாம்; சதிச்செயல் புரிந்து நண்பாய்ச் சார்ந்து சிரித்துச் சிரித்துச் செய்வ தெல்லாம் | |
--------------------------------------------------------------- |
| நுகர்வார் - அனுபவிப்பார், உள்ளுவோன் - நினைப்போன். | |
| | |