| மறைத்துப் பகைக்கும் மனத்தை வெல்வது | |
| பரிக்கொம் பாகும் பாவாய்! தமிழ்க்கும் | 70 |
| அகப்பகை புறப்பகை ஆயிரண் டுண்டென மிகப்புரிந் தாற்றின் மேம்படும் நின்பணி; | |
|
பன்மொழி பயிலெனல் |
|
| பூங்கொடி நின்புகழ் பூவுல கெங்கும் ஓங்கிய தாதலின் உன்னொடு சொற்போர் | |
| ஆற்ற நினைவோர் ஆங்காங் கெழுவர்; | 75 |
| வேற்று மொழிகள் விரைவில் பயில்நீ! தெலுங்கு கன்னடம் தென்மலை யாளம் ஒழுங்கு பெறநீ ஓதுதல் வேண்டும் பழம்பெரு மொழியுள் ஒன்றெனப் பகுக்கும் | |
| வழங்குதல் இல்லா வடமொழி முதலா | 80 |
| நெருநெல் முளைத்திவண் வருமொழி வரையில் மறுவறப் பயின்று மாற்றார் வாயைத் திறவா வண்ணம் செய்திடல் வேண்டும்! அவ்வம் மொழியார் ஒவ்வும் வகையில் | |
| செவ்விதின் உரைப்பாய் செந்தமிழ்ப் பெருமை; | 85 |
|
எழுச்சி யூட்டல் |
|
| அவரவர் மொழியில் உயர்பொருள் காணின் தவறறப் பெயர்த்துத் தாய்மொழிக் காக்கு! தாய்மொழி விடுத்துப் பிறமொழி விழைவோர் ஆய்வுரை கேட்கின் அவர்செருக் கடக்கு! | |
| பிழைபடத் தமிழைப் பேசியும் எழுதியும் | 90 |
| பிழைப்போர்க் காணின் பேரறி வூட்டு! பழிப்போர் இங்கே பிழைப்போர் அல்லர் அழித்தேன் என்றெழும் சிறுத்தைகள் கூட்டம் நாட்டினில் பல்கிட நல்லுரை வழங்கு! | |
--------------------------------------------------------------- |
| பரி - குதிரை, பாவாய் - பூங்கொடியே, நெருநல் - நேற்று, மாற்றார் - பகைவர். | |
| | |