பக்கம் எண் :

தொல்காப்பியம் உணர்ந்த காதைபக்கம் : 75

  மறைத்துப் பகைக்கும் மனத்தை வெல்வது  
  பரிக்கொம் பாகும் பாவாய்! தமிழ்க்கும் 70
  அகப்பகை புறப்பகை ஆயிரண் டுண்டென
மிகப்புரிந் தாற்றின் மேம்படும் நின்பணி;
 
 

பன்மொழி பயிலெனல்

 
  பூங்கொடி நின்புகழ் பூவுல கெங்கும்
ஓங்கிய தாதலின் உன்னொடு சொற்போர்
 
  ஆற்ற நினைவோர் ஆங்காங் கெழுவர்; 75
  வேற்று மொழிகள் விரைவில் பயில்நீ!
தெலுங்கு கன்னடம் தென்மலை யாளம்
ஒழுங்கு பெறநீ ஓதுதல் வேண்டும்
பழம்பெரு மொழியுள் ஒன்றெனப் பகுக்கும்
 
  வழங்குதல் இல்லா வடமொழி முதலா 80
  நெருநெல் முளைத்திவண் வருமொழி வரையில்
மறுவறப் பயின்று மாற்றார் வாயைத்
திறவா வண்ணம் செய்திடல் வேண்டும்!
அவ்வம் மொழியார் ஒவ்வும் வகையில்
 
  செவ்விதின் உரைப்பாய் செந்தமிழ்ப் பெருமை; 85
 

எழுச்சி யூட்டல்

 
  அவரவர் மொழியில் உயர்பொருள் காணின்
தவறறப் பெயர்த்துத் தாய்மொழிக் காக்கு!
தாய்மொழி விடுத்துப் பிறமொழி விழைவோர்
ஆய்வுரை கேட்கின் அவர்செருக் கடக்கு!
 
  பிழைபடத் தமிழைப் பேசியும் எழுதியும் 90
  பிழைப்போர்க் காணின் பேரறி வூட்டு!
பழிப்போர் இங்கே பிழைப்போர் அல்லர்
அழித்தேன் என்றெழும் சிறுத்தைகள் கூட்டம்
நாட்டினில் பல்கிட நல்லுரை வழங்கு!
 

---------------------------------------------------------------

  பரி - குதிரை, பாவாய் - பூங்கொடியே, நெருநல் - நேற்று, மாற்றார் - பகைவர்.