12. மலையுறையடிகள் வாழ்த்திய காதை |
பூங்கொடி மலையுறையடிகளை அடைதல் |
|
| தாயும் தோழியும் தன்னுடன் தொடர ஆயும் அறிவினர் நரைமுதிர் யாக்கையர் சாயா நாவினர் தங்கிடன் குறுகிக் காயாப் பூங்கொடி கண்ணீர் மல்க | |
| மலையுறை யடிகள் மலரடி வணங்கிக் | 5 |
| | |
| பூங்கொடி நிகழ்ந்தன கூறல் | |
| | |
| காற்றலை வீசும் கடல்நகர்ப் புக்கதூஉம், ஆங்கவள் சிலரால் அருந்துயர் பெற்றதூஉம், தீங்கினை எதிர்த்துத் திருத்தி வென்றதூஉம், அழுக்கிலா வாழ்க்கை ஆசான் றன்பால் | |
| திருக்குறள் கற்றுத் தெளிந்து நின்றதூஉம், | 10 |
| பொருள்நூல் முழுதும் திரிபற உணர்ந்ததூஉம், அருள்விழி நாவலூர் அமுதத் தம்மை விறலுறு தமிழன் மீனவன் கையன பெறலருஞ் சுவடிகள் பெட்புடன் ஈந்ததூஉம், | |
| ஏந்தல் மீனவன் இயல்பினை மலையுறை | 15 |
| அடிகள் தம்பால் அறிகஎன் றறைந்ததூஉம் முடிய வுரைத்து முகிழ்த்தசெங் கையினள் படிமிசை நின்றனள் பழுதறு பூங்கொடி; | |
| | |
| அடிகளார் அறவுரை | |
| | |
| மலையுறை யடிகள் மனங்களி கூர்ந்து, | |
| `கலைபயில் செல்வி! கல்லா மாந்தர் | 20 |
| நாட்டிடை மிகுதலின் நலிவுகள் மல்கின, | |
| | |
--------------------------------------------------------------- |
| யாக்கையர் - உடலினர், திரிபற - மயக்கம் அகல, விறலுறு - வலிமையுறும், பெட்புடன் - விருப்புடன், ஏந்தல் - சிறந்தோன், முகிழ்த்த - கூப்பிய, படிமிசை - நிலத்தின்மீது, | |
| | |