| ஆட்டினம் ஆயினர் ஆதலின் அவர்பால் கல்வித் தொண்டே கடவுள் தொண்டெனச் சொல்லுதல் வேண்டும் மெல்லியற் பூங்கொடி! | |
|
கல்விப் பயன் |
|
| ஓதிய கல்வி உயர்வினை நல்கும், | 25 |
| சாதியில் உயர்வு தாழ்வுகள் சாய்க்கும் குடிக்குயர் வாக்கும், கொடுமைகள் போக்கும், பிடித்துள பேதமைப் பிணியினைத் தொலைக்கும், அடிமைத் தளைகளை அறுக்கும், உலகில் | |
| படிறு செய்திடப் பார்ப்பார் தமக்கிடம் | 30 |
| இல்லா தொழிக்கும், இன்பம் பயக்கும் பொல்லா வினைகளைப் புதைக்கும், நாளும் மான வுணர்வினை வளம்பெற வளர்க்கும் ஆன கல்வி, அவலக் கவலை | |
| கடத்தற் கொருமரக் கலமும் ஆகும்; | 35 |
| | |
| கற்றார் செய்தொழில் | |
| | |
| மடக்கொடி நல்லாய்! மாநிலத் திந்நாள் கல்விப் பணியே காத்திடல் வேண்டும்; நல்லஇச் செயலால் நம்மனோர் அறிவொளி எய்திடப் பெறுவர்; எய்திய காலை | |
| உய்வகை அறிவர்; உணர்வும் பெறுவர்; | 40 |
| எப்பொருள் ஆயினும் மெய்ப்பொருள் காண்பர்; தப்பெதும் புரியார்; தாய்மொழி அன்பும் இயல்பினில் வாய்க்கும்; இந்தநல் லன்பால் மயலறி வொழித்து மாண்புகள் ஆக்குவர்; | |
| பிறமொழி தமிழிற் பெருகுதல் காணின் | 45 |
| அறவே ஒதுக்குதற் காவன இயற்றுவர்; | |
--------------------------------------------------------------- |
| ஆட்டினம் - ஆடுகள், படிறு - வஞ்சனை, உய்வகை - முன்னேறும் வழி. | |
| | |