மொழிக் கலப்பு |
|
| செம்பொன் தன்னொடு செம்பு கலந்தால் அம்பொன் அணிகள் அமைத்திடல் ஒல்லும்; கலவா விடினோர் கலன்செய இயலாது; | |
| அதுபோற் பிறமொழி அகற்றுதல் கருதின் | 50 |
| தமிழ்வள ராதெனச் சாற்றுவர் சிலர்தாம்; அமிழ்தம் இனிக்க அச்சு வெல்லம் கலப்போர் உலகிற் கண்டோ மில்லை; உலப்பிலாத் தமிழ்மொழி உயர்தனிச் செம்மொழி | |
| கலப்பிலா தியங்கும், கற்றவர் அறிவர்; | 55 |
| செம்பு கலந்தணி செய்வதும் இயற்கை, செம்பும் மிகவே சேர்த்திடப் பெறுமேல் கலன்செய அப்பொன் பலன்படா தொழியும்; | |
| | |
| இசையுங் கூத்தும் பரப்புக எனல் | |
| | |
| நலமிகு நல்லாய்! நற்றமிழ் வளரப் | |
| புலம்புலஞ் சென்று புரிகநற் றிருப்பணி; | 60 |
| மங்கை! கேளினி மற்றொன் றறைகுவென் துய்ப்போர்ப் பிணிக்கும் தொன்மைசேர் இசைநூல், மெய்ப்பா டனைத்தும் மேவிய கூத்துநூல் எத்துணை எத்துணை இருந்தன தமிழில்! | |
| அத்துணை நூலும் அழிந்தன கடலால் | 65 |
| எனநாம் இரங்கி அயருங் காலைக் | |
| கனவெனக் கட்டுக் கதையெனக் கழறியும் புலவோர் தம்மைப் பொல்லாங் குரைத்தும் அலறுவோர் சிலருளர் அருகிய அறிவினர் | |
| அவருரை பொய்யென ஆக்குக நங்காய்! | 70 |
| சுவடியின் துணையாற் சொல்லுக மெய்ம்மை; | |
--------------------------------------------------------------- |
| உலப்பிலா - அழிவில்லாத, பிணிக்கும் - தன்வயமாக்கும், அருகிய - சுருங்கிய. | |
| | |