தமிழினமும் குரங்கினமும் |
|
| தமிழிற் பற்றுதல் தவறுவோர் தம்மையும் தமிழினம் என்றே சாற்றுதல் கண்டோம்; தாய்க்குரங் கொருகிளை தாவுங் காலைத் | |
| தாய்மடி பற்றுதல் தவறுமேல் குட்டியைக் | 75 |
| குரக்கினம் தம்மொடு கொள்ளா தொழிக்கும்; மரக்கிளை வாழும் மந்தியின் மானம் நமக்கிலை அந்தோ! நாமோ மாந்தர்! மானம் பரவுதற் கானவை இயற்றுக; | |
| | |
| தாய்மையும் பொதுப் பணியும் | |
| | |
| பிணியுறு குழவியின் பெருந்துயர் கண்டு, | 80 |
| தணிவறு காதல் தாய்மனம் உருகிப் பிணியற மருந்துகள் பெட்புடன் ஈய, அறியாக் குழவி அலறுதல் போல, அறியா மைப்பிணி அகற்றுதல் வேண்டிப் | |
| பெரியோர் நல்லுரை பேசுதல் கேட்டுச் | 85 |
| சிறியோர் மருளுவர் சீறுவர்; அவர்தமைப் பொதுப்பணி புரிவோர் ஒதுக்குதல் இன்றித் தாய்மைப் பண்பே தாங்குதல் வேண்டும்; சேய்நலங் கருதிய தாய்,மருந் துணல்போல் | |
| உலகம் நலம்பெற உறுதுயர் வரினும் | 90 |
| விலகா ததனை விழைந்திடல் வேண்டும்; | |
| | |
| காணாப் புதுமை | |
| |
| ஆய்பொற் றொடியே, அறிகதில் அம்ம! தகுமிசை யரங்கில் தாய்மொழி விடுத்துப் புகுமொழி இசைத்திடும் புன்மையை உலகில் | |
| யாண்டுங் காண்கிலை ஈண்டுக் காண்குவை; | 95 |
--------------------------------------------------------------- |
| குரக்கினம் - குரங்கினம், குழவி - குழந்தை, தணிவறு - நீங்காத. | |
| | |