13. மீனவன் வரலாறுணர்ந்த காதை |
அடிகளார் கூறத்தொடங்குதல் |
|
| இசையியல் இயம்பும் ஏட்டுச் சுவடி வசையிலா நினக்கு வழங்கிய மீனவன் தன்றிறம் கூறுவென் தயங்கிழை! கேளாய், நின்பெரும் பணிக்கும் நீள்பயன் விளைக்கும்; | |
| | |
| குறியிடத்திற் காதலர் | |
| | |
| நெல்லூர் என்னும் நல்லூர் ஆங்கண் | 5 |
| கழனி வினைபுரி களமர் குடிதனில் எழில்நிறை செல்வி இடுபெயர்ப் பொன்னி நல்லவள் ஒருத்தி, கொல்லுலைத் தொழில்புரி வில்லவன் என்னும் விடலை தன்னொடு | |
| அறியாக் காதல் வாழ்வின ளாகிக் | 10 |
| குறியிடம் ஒருநாள் கூடினள் நிற்க; | |
| | |
| அலர் பரவியது | |
| | |
| நெறியிடை ஏகும் நெடுமகன் ஒருவன் கண்டனன் அவர்நிலை காதல் அறியான், அண்டையர் மறைசெயல் அறிவதும் தீமை | |
| அதனைப் பலர்க்கும் அறைவதும் தீமை; | 15 |
| இதனை உணரான் எதிர்ப்படுவோர்க்கெலாம் புதுமை கண்டவன் போலதை விளம்ப மனைதொறும் அம்மறை வாயிடம் பெற்றது நினையா வகையிற் பனையாய் வளர்ந்தது; | |
| | |
| ஊரார் வாய் | |
| | |
| பாரோர் அறிய ஒருபொருள் பரப்ப | 20 |
--------------------------------------------------------------- |
| தயங்கிழை - பூங்கொடி, கழனி - வயல், களமர் - உழவர், விடலை - சிறந்த ஆடவன், நெறியிடை - வழியில், நெடுமகன் - மூடன், மறை - இரகசியம். | |
| | |