பக்கம் எண் :

மீனவன் வரலாறுணர்ந்த காதைபக்கம் : 91

  ஊரார் வாய்போல் ஒன்றிலை உலகில்
உற்றொரு மறையை மற்றவர்க் குரைக்க
முற்படும் மாந்தர் கற்பனை என்னே!
கேட்டிடும் ஒன்றைக் கண்கால் படைத்து
 
  நாட்டிடை நடமிட நற்பணி புரிகுவர்; 25
     
 

தந்தையின் சீற்றம்

 
     
  மறைபிறர் அறிய மலர்ந்தஅவ் வலர்மொழி
குறையிலாக் களமர் குலமகன் செவிபுகத்
தணியாச் சினமொடு தன்மகட் கூஉய்த்
`துணியாச் செயல்செயத் துணிந்தனை! என்குல
 
  அணையாப் பெருமையை அணைத்தனை பேதாய்! 30
  நினைகுவை நீயிப் பழிசெய என்றே
நினைந்தேன் அல்லேன் முனைந்தாய் கொடியாய்!
மேதியிற் கீழென மேலோர் நினைக்கச்
சாதி கெடுக்கச் சதிசெய் தனையே!
 
  வீதி சிரிக்க விளைத்தனை சிறுசெயல்! 35
     
 

இற்செறித்தல்

 
     
  பெற்றான் ஒருவன் உற்றான் என்றும்
சற்றே நினைந்திலை! சாற்றுதல் கேள்,இனிப்
புறச்செல வொழிப்பாய்! போற்றுதி மானம்!
அறச்செயல் விடுத்துநீ அகலுவை யேல்,என்
 
  கதிர்அரி வாள்உன் கழுத்தினை அரியும், 40
  மதியொடு நட!என் மானமே பெரி'தென
இடிபடப் பேசி இற்செறித் தனனே;
 
     
 

தடைபடாக் காதல்

 
     
  கொடிபடர் முல்லையின் வெடிமலர் மணத்தைக்
கூர்முள் வேலியாய் காத்தலுங் கூடுமோ?
 
  ஏர்முனை பாறையில் எவ்வணம் உழுதிடும்? 45

---------------------------------------------------------------

  நினைகுவை - நினைப்பாய், மேதி - எருமை, புறச்செலவு வெளிச் செல்லல், இற்செறித்தனன் - வீட்டிலடைத்தான்.