பக்கம் எண் :

பக்கம் :92பூங்கொடி

  நேர்வரும் பகையால் நின்பெருங் கொள்கை
சீர்பெற் றோங்கிச் செழிப்புறல் போலப்
பொன்னியின் காதல் பொங்கிப் பொலிந்தது;
 
     
 

பொன்னியின் செயலறு நிலை

 
     
  இந்நினை வதனால் ஏங்கி மெலிவது  
  கண்டனன் தந்தை; கடிதினில் இவள்மணம் 50
  கண்டமை வேன்எனக் கொண்டுளங் கருதி
முயல்வுழி, இச்செயல் முழுவதும் உணர்ந்த
கயல்விழி இரங்கிக் கண்ணீர் மல்கிச்
செயலறக் கிடந்தனள் மயலது மிகவே;
 
     
 

பொன்னி காதலனிடம் செய்தி கூறல்

 
     
  இனைந்துயிர் மாய இடங்கொடா ளாகி 55
  நினைந்தொரு முடிவு நேர்ந்தனள் மனத்தே;
விடிந்தால் திருநாள் விரைவினில் அனைத்தும்
முடிந்தே எழுவேன் என்மனம் முடுகும்
தையற் றொழில்வலான் தாளென இரவில்
 
  தையல் மலரடி விரைந்தன தனிமையில்; 60
  வல்லவன் காதலன் வதியிடன் குறுகி
வில்லவன் றன்பால் நிகழ்ந்தன விளம்பலும்;
 
     
 

வில்லவன் புலம்பல்

 
     
  `அந்தோ! நின்னை அயலவன் மணஞ்செயின்
நொந்தே சாவேன் நொடிப்பொழு தினியிரேன்
 
  இந்த உரைசொல வந்தனை யோ'என 65
  வெந்துழல் மனத்தினன் வில்லவன் புலம்ப,  
     
 

பொன்னியின் துணிபு

 
     
  `உயிரனை யாய்!நீ உணரா துரைத்தனை!
துயரம் விட்டொழி! துணைவன் நீயே
அயிரேல்! நின்னை அடையே னாயின்
 

---------------------------------------------------------------

  முடுகும் - விரையும், அயிரேல் - ஐயப்படாதே.