| நேர்வரும் பகையால் நின்பெருங் கொள்கை சீர்பெற் றோங்கிச் செழிப்புறல் போலப் பொன்னியின் காதல் பொங்கிப் பொலிந்தது; | |
| | |
| பொன்னியின் செயலறு நிலை | |
| | |
| இந்நினை வதனால் ஏங்கி மெலிவது | |
| கண்டனன் தந்தை; கடிதினில் இவள்மணம் | 50 |
| கண்டமை வேன்எனக் கொண்டுளங் கருதி முயல்வுழி, இச்செயல் முழுவதும் உணர்ந்த கயல்விழி இரங்கிக் கண்ணீர் மல்கிச் செயலறக் கிடந்தனள் மயலது மிகவே; | |
| | |
| பொன்னி காதலனிடம் செய்தி கூறல் | |
| | |
| இனைந்துயிர் மாய இடங்கொடா ளாகி | 55 |
| நினைந்தொரு முடிவு நேர்ந்தனள் மனத்தே; விடிந்தால் திருநாள் விரைவினில் அனைத்தும் முடிந்தே எழுவேன் என்மனம் முடுகும் தையற் றொழில்வலான் தாளென இரவில் | |
| தையல் மலரடி விரைந்தன தனிமையில்; | 60 |
| வல்லவன் காதலன் வதியிடன் குறுகி வில்லவன் றன்பால் நிகழ்ந்தன விளம்பலும்; | |
| | |
| வில்லவன் புலம்பல் | |
| | |
| `அந்தோ! நின்னை அயலவன் மணஞ்செயின் நொந்தே சாவேன் நொடிப்பொழு தினியிரேன் | |
| இந்த உரைசொல வந்தனை யோ'என | 65 |
| வெந்துழல் மனத்தினன் வில்லவன் புலம்ப, | |
| | |
| பொன்னியின் துணிபு | |
| | |
| `உயிரனை யாய்!நீ உணரா துரைத்தனை! துயரம் விட்டொழி! துணைவன் நீயே அயிரேல்! நின்னை அடையே னாயின் | |
--------------------------------------------------------------- |
| முடுகும் - விரையும், அயிரேல் - ஐயப்படாதே. | |
| | |