| கயிறே துணையெனக் கருத்தினிற் கொண்டுளேன்' | 70 |
| என்றனள் பொன்னி; இவ்விடை கேட்டு, | |
| | |
| வில்லவன் எழுச்சி | |
| | |
| `நன்றுரை புகன்றனை! நமக்கேன் சாவு? வென்றுல காள்வோம்; வீணரை எதிர்ப்போம்; நினைப்பெறின் உலகை நினையேன் மதியேன்; | |
| முனைத்தெழு பகையை முறிப்பேன் சிரிப்பேன்; | 75 |
| நின்னுளம் யாதோ! என்னுளம் வாழ்வோய்!' | |
| | |
| உடன் போக்கு | |
| | |
| என்னலும், மின்னலின் இடையினள் துவண்டு கன்னலின் மொழியாற் `கருத்துரை வெளிப்பட உரை'எனத், தலைவன் `உடன்போக்' கென்றனன்; | |
| `விரைவாய்! விரைவாய்! விடுதலை பெறுவோம்; | 80 |
| மீன்,புனல் வாழ வெறுப்பதும் உண்டோ? ஏன்உனக் கையம்? எழுவாய் தலைவா! நின்தாள் நிழலே என்பே ரின்பம்' என்றவள் செப்ப, இருவரும் அவ்வயின் | |
| ஒன்றிய உணர்வால் உடன்போக் கெழுந்தனர்; | 85 |
| | |
| தந்தையின் மானவுணர்வு | |
| | |
| துன்றிருட் கணமெலாம் சென்றிடக் கதிரோன் ஒளிமுகங் காட்டி உலகெலாம் விளக்கக் களமர்தம் குலமகன் கண்விழித் தெழுவோன் தன்மகட் காணான் தணியாச் சினமிகப் | |
| `புன்மகள் தன்னிலும் என்குல மானம் | 90 |
| ஒன்றே பெரிதாம்' என்றே இருந்தனன்; | |
| | |
| பொன்னியின் செல்வன் | |
| | |
| ஒன்றிய உணர்வால் உடன்போகக் கெழுந்தோர் சென்றொரு சுரநகர் சேர்ந்தனர்; ஆங்கண் | |
--------------------------------------------------------------- |
| அவ்வயின் - அவ்விடம், துன்றிருள் - நிறைந்த இருள். | |
| | |