| வாழும் நாளில் மகப்பே றுறுங்கால் | |
| ஆண்மக வுயிர்த்தவள் ஆவி துறந்தனள்; | 95 |
| ஊண்புசி யானாய் உழலுமங் வில்லவன் புரிமனை காதற் பொன்னி நல்லவட் பிரிவினை ஆற்றான் பெற்றஅம் மகவை உறுமக வில்லா ஒருவன் பாற்படுத் | |
| தேகினன் வெறுத்தே; இன்னுயிர் நீத்தஅப் | 100 |
| பொன்னியின் செல்வன்இம் மீனவன், பூங்கொடி! | |
| | |
| கலை பயில் தெளிவு | |
| | |
| நன்மக விதனை நயந்து வாங்கியோன் தன்மனை யாளும் தாம்பெறு பேறெனக் கண்ணென மணியெனக் காத்து வளர்த்தனர்; | |
| எண்ணும் எழுத்தும் எழிலோ வியமும் | 105 |
| பண்ணும் பிறவும் பழுதிலா துணர்ந்தே செவ்விய நடையினன் செந்தமிழ் வல்லுநன் அவ்வூர் மக்கள் அறிஞன்என் றியம்ப, | |
| | |
| கோவிலில் மீனவன் | |
| | |
| வாழ்வோன் ஒருநாள் வானுயர் கோவில் | |
| சூழ்வோன் உட்புகச் சொற்றமிழ் கேட்டிலன் | 110 |
| வழிபா டியற்றி வாழும் அவர்பால் `இழிவாம் இச்செயல்! இனிமேல் தமிழால் வழிபாட் டுரையை வழங்குக' என்னலும், | |
| | |
| மறியல் போராட்டம் | |
| | |
| `நெறியன் றாம்'என நிகழ்த்தினர் மறையோர்; | |
| மறியல் செய்தனன், மற்றவர் கூடிச் | 115 |
| சிறியன் இவன்தான் செருக்குற் றானெனத் | |
--------------------------------------------------------------- |
| பேறு - செல்வம், உயிர்த்தவள் - பெற்றவள், ஊண் - உணவு, உழலும் - வருந்தும், ஆற்றான் - தாங்காதவன், செவ்விய நடை - நல்லொழுக்கம். | |
| | |