பக்கம் எண் :

மீனவன் வரலாறுணர்ந்த காதைபக்கம் : 95

  தூணிற் கட்டினர்; `தூய்தமிழ்ப் பெரியீர்!
வீணில் தவறுகள் விளைத்திட முனைந்தீர்!
உருவுகண்ட டெள்ளேல்! ஒருபொருள் யார்வாய்க்
 
  கேட்பினும் மெய்ப்பொருள் காண்பதே அறிவாம், 120
  கோட்பகை ஒன்றே மேற்பட நினைந்து
நாணுச் செயல்செயல் நற்றமிழ் மரபோ?'
 
     
 

மீனவனைப் பழித்தல்

 
     
  என்றனன்; அவ்விடை இருந்தவர் ஒருவர்
`நன்று நன்றடா! மரபினை நவிலக்
 
  கூசினை யல்லை! குலவுநின் மரபோ 125
  ஏசலுக் குரியது! வேசியின் பிள்ளை!
சாதி கெடுத்தவள் தந்தைசொல் விடுத்தவள்
வீதியில் நின்றவள் விடுமகன் நீயோ
எம்பெரு மரபை இகழ்ந்துரை கூறினை?
 
  வம்பினை விலைக்கு வாங்கினை சிறியோய்!' 130
  என்றிவை கூறி ஏளனம் செய்தனர்;  
     
 

மீனவன் வெஞ்சினம்

 
     
  `பெரியீர்! ஏளனப் பேச்சினை விடுமின்!
சிறியேன் தீங்கு செய்ததும் உண்டோ?
அன்னையைப் பழித்தீர் ஆணவப் போக்கால்,
 
  என்னைப் பிணித்தீர் இலையேல் நும்முடல் 135
  துண்டு துண்டாத் துணிப்பென், பிழைத்தீர்!  
     
 

காதல் ஒரு குற்றமா?

 
     
  கண்ட தவறென் காரிகை கற்பில்?
ஒருவனை உளத்தால் உன்னினள், எதற்கும்
வெருவிலள், அவனே விழைமண வாளன்
 
  என்றவன் துணையை ஏற்றனள் காதலில் 140

---------------------------------------------------------------

  உருவு - உருவம், எள்ளேல் - இகழாதீர், கோட்பகை - கொள்பகை, பிணித்தீர் - கட்டினீர்.