| வென்றனள், பொன்னி, வீரத் தாயென நின்றவள் கற்பின் நிறைதனை இகழ்ந்தீர்! | |
| | |
| குணமிழந்தாள் நும் மகள் | |
| | |
| கணவனை இழந்த காரிகை நும்மகள் குணமிழந் தாளிதைக் குவலயம் அறியும் | |
| கருவுற் றாளெனக் கண்டதும் நெஞ்சம் | 145 |
| வெருவுற் றிழைத்த வினையெலாம் மறந்தீர்! கிணறே உரைக்கும்நும் கீழ்மைக் குணமெலாம், உணரா தும்மை உயர்வா நினைத்தீர்! கொடும்பழி யஞ்சாக் குலத்தினில் தோன்றி | |
| மிகும்பொருள் ஒன்றால் மேலவர் போல | 150 |
| நாடகம் நடித்தீர்! நல்லவள் கற்பில் கேடுரை கிளந்தீர்! கிளறேல் என்சினம்! | |
| | |
| சாதி ஏது | |
| | |
| சாதி என்றொரு சொல்லினைச் சாற்றினீர் ஆதியில் நம்மிடம் அச்சொல் இருந்ததோ? | |
| பாதியில் புகுந்தது பாழ்படும் அதுதான்; | 155 |
| தொழிலாற் பெறுபெயர் இழிவாய் முடிந்தது; அழியும் நாள்தான் அணிமையில் உள்ளது; பிறப்பொக்கும் எல்லா உயிர்க்குமென் றோதிய திருக்குறள் உண்மைநும் செவிப்புக விலையோ? | |
| கதிரும் நிலவும் காற்றும் மழையும் | 160 |
| எதிரும் உமக்கும் எமக்கும் ஒன்றே! தவிர்த்தெமை நும்பாற் சாருதல் உண்டோ? கபிலர் அகவல் கண்டதும் உண்டோ? | |
| | |
| காலம் அறிந்து கருத்தை மாற்றுக | |
| | |
| சாதிப் பெயர்சொலித் தாழ்வும் உயர்வும் | |
| ஓதித் திரியின் உலகம் வெறுக்கும்; | 165 |
--------------------------------------------------------------- |
| குவலயம் - உலகம், கதிர் - கதிரவன். | |
| | |