பக்கம் எண் :

மீனவன் வரலாறுணர்ந்த காதைபக்கம் : 97

  பிறப்பால் தாழ்வுரை பேசுவீ ராயின்
சிறப்பால் நீவிர் செப்புநும் முன்னையர்
மூலங் காணின் ஞாலஞ் சிரிக்கும்;
காலங் கருதிக் கருத்தினை மாற்றுமின்';
 
  தோலா நாவினன் துணிந்திவை கூறி, 170
  வேட்டங் கருதிக் காட்டகம் போகிக்
கோட்டுக் களிற்றொடு கொடும்போர் விளைத்து
மீண்ட வேங்கையின் நீண்டுயிர்ப் பெறிய,
 
     
 

முதியோன் தூண்டுதல்

 
     
  மூண்ட சீற்றத்து முதியோன் கொதித்துப்  
  `பெருமறை மந்திரம் பிழைஎனப் பிதற்றும் 175
  சிறுமகன் நாத்திகன் செருக்கினைப் பாரீர்!
இன்றெனப் பேசினன் இவனைநாம் விடுத்தால்
நாளைநும் பழிக்க நாணான் நடுங்கான்
கோழை எனநமைக் கொண்டனன் போலும்;
 
  தொழுதகு முன்னையர் வழிமுறை பிழைஎனப் 180
  பழுதுரை கூறிய பாவியைப் பொறுத்தீர்!
ஆத்திகப் பெரியீர்! ஆண்டவர் பழித்தனன்
ஆத்திரம் கொண்டிலீர் அஞ்சினீர் கொல்'என;
 
     
 

கயவர் தாக்குதல்

 
     
  முரடர் சிலர்அம் மீனவன் முகத்தில்  
  குருதி சிதறக் குத்தினர்; மயக்குறக்185
  கட்டவிழ்த் தேகினர்அக் கருணை மாந்தர்;
சுட்டாற் செம்பொன் கெட்டா போகும்?
முட்டாள் தடுக்க முற்படின் பயணம்
தொட்டார் குறியிடம் விட்டொழி வாரோ?
 
  மயங்கினன் கிடக்கும் மகன்றனை வளர்த்தவன் 190
  புயங்களிற் சுமந்து தன்மனை புகுந்தனன்;  

---------------------------------------------------------------

  தேலா - தோற்காத, வேட்டம் - வேட்டை, கோடு - கொம்பு, முட்டாள் - முள்தாள்.