| வளர்த்தவள் வாய்மொழி | |
| | |
| வயங்கிழை நல்லாள் வாய்விட் டலறித் `துரும்பும் படாஅவகை விரும்பி வளர்த்தேன் குறும்பர் இவ்வணம் கொடுந்துயர்ப் படுத்தவோ? | |
| அந்தோ அந்தோ'என் றழுவோள் முன்னர் | 195 |
| நொந்துழல் உடலினன் நுண்ணிதின் உயிர்க்கக் கண்ணீர் மல்கிக் கசிந்துளம் உருகிப் புண்ணீர் துடைத்துப் பொருந்திய மருந்திட் டாற்றி, `என்துயர் ஆற்றினை மகனே! | |
| ஏற்றுள இப்பணி இனிமேல் வேண்டா | 200 |
| நமக்கேன் ஊர்ப்பகை? நல்லது கெட்டது சுமப்பவர் நாமே! சொல்வது கேள்'எனத் | |
| | |
| மீனவன் உணர்ச்சி மொழி | |
| | |
| `தாயே வரைத்தேன் தாம்பெற முயலுநர் ஈயின் தாக்குதல் ஏற்பதும் வேண்டும்; | |
| குலவுநன் முத்துக் குளிப்பவர் கடல்மிசை | 205 |
| அலைவரல் காணலும் அடங்கவோர் இல்லை; தேனும் முத்தும் மானும்நம் செந்தமிழ்; யானும் அதனை நயந்துளேன் ஆதலின் அலைக்கும் ஈக்கும் அஞ்சேன், என்பணி | |
| நிலைக்கும் வெல்லும் நீமனங் கலங்கேல்' | 210 |
| எனவாங்கு உரைத்திவன் இருக்க ஊர்க்குறு மாக்கள் | |
| | |
| ஊரவர் தொல்லை | |
| | |
| துரைத்தனம் செய்தனர் தொல்லைகள் தந்தனர்; வளர்த்தவர் அவற்றால் வாடி வதங்கினர்; | |
| இடுக்கண் இவர்க்குறல் என்னா லன்றோ? | 215 |
| துடுக்கர் புன்செயல் தொலைவதெந் நாளோ? | |
| விடுத்திவ் வூரின் வெளிப்படல் நன்றென, | |
--------------------------------------------------------------- |
| படாஅவகை - படாமல், வரை - மலை, குறுமாக்கள் - தீயவர், துரைத்தனம் - அதிகாரம். | |
| | |