பக்கம் எண் :

மனோன்மணீயம்
31

முதல் அங்கம்

5-ம் களம்

இடம் : குடிலன் மனை. காலம் : மாலை.

குடிலன் உலாவ.

(இணைக் குறளாசிரியப்பா)


குடிலன்,புத்தியே சகல சத்தியும் ! இதுவரை
(தனிமொழி)நினைத்தவை யனைத்து நிறைவே றினவே.
உட்பகை மூட்டிப் பெட்புற் றிருந்த
மதுரையாம் முதுநகர் விடுத்து மன்னனைப்
5.புதியதோர் பதிக்குக் கொணர்ந்து புரிசையுங்
கட்டுவித் தோம்நம் இட்டமாம் வகையே.
நாமே யரசும். நாமே யாவும்.
மன்னவன் நமது நிழலின் மறைந்தான்.
பிடித்தாற் கற்றை விட்டாற் கூளம்.
10.மதுரையை நெல்லை யினிமேல் வணங்குமோ?
இதுதனக் கிறைவ னிறக்கில் யாரே
அரச ராகுவர்? - (மௌனம்)
புரவலன் கிளைஞர் புரிசையைக் கேட்கினும்
வெருளுவர். வெல்லார். ஆயினும் -
15.முழுதும் நம்மையே தொழும்வகை யிலையோ?
கருவியுங் காலமு மறியி லரியிதென்?
ஆ ! ஆ ! அயர்த்தோ மயர்த்தோம் !
மயக்கம் மனோன்மணி கொண்டதை முற்று
மயர்த்தோம ! ஆ! ஆ! ஆயிழை யொருவனைக்
20.கண்டு காமங் கொண்டவ ளல்லள்.
பருவம் வருதலாற் பற்றல் விழைந்தனள்.
அருகுள தெட்டியே யாயினு முல்லைப்
படர்கொடி படரும். பலதே வனையவள்
இடமே பலமுறை யேவி லுடன்படல்