| 25. | கூடும். கூடிலென் கூடா? |
| | யாவ னஃதோ வருமொரு சேவகன்? |
| | (சேவகன் வர) |
| | |
| சேவகன். | | ஜய ! ஜய ! விஜயீ பவகுடி லேந்திரா? |
| | (திருமுகம் கொடுக்க) |
| | |
| குடில, | | நல்ல தப்புறம் நில்லாய். ஓ ! ஓ ! |
| (வாசித்து நோக்கி) | | சொல்லிய தார்கொல்? சுந்தர னேயாம். |
| | (சேவகன் ஒருசாரிருந்து தூங்க) |
| 30. | அடுத்தது போலு மிம்மணம். அவசியம் |
| | நடக்கும். நடக்கி னென்? நமக்கது நன்றே. |
| | அரசர்கட் காயு ளற்பமென் றறைவர். |
| | பிரியமாந் தன்மகட் பிரிந்து வெகுநாள் |
| | வாழான் வழுதி. வஞ்சிநாட் டார்க்குத் |
| 35. | தாழா ரிந்நாட் டுள்ள ஜனங்களும். |
| | அதுவு நன்றே. - ஆயினுங் |
| | கால தாமசஞ் சாலவு மாகும். |
| | வேறொரு தந்திரம் வேண்டும். ஆ ! ஆ ! |
| | மாறன் மாண்டான். மன்றலும் போனது. |
| 40. | சோ னிறுமாப் புடைய தோர் வீரன் |
| | ஆமெனப் பலரும் அறைவர். அதனால் |
| | நாமவன் பால்விடுந் தூதுவர் நலம்போன் |
| | மெள்ள அவன்றன் செருக்கினைக் கிள்ளிற் |
| | படைகொடு வருவன். திண்ணம். பாண்டியன். |
| 45. | அடைவதப் போதியா மறிவம். |
| | போர்வந் திடிலிவண் நேர்வந் திடமெலாம். |
| | யாரிற வார்கள்? யாரறி வார்கள்? |
| | முடிதன் னடிவிழில் யாரெடுத் தணியார்? |
| | அரச வமிசக் கிரமம் ஓரில் |
| 50. | இப்படி யேமுத லுற்பவ மிருக்கும். |
| | சிலதலை முறையாப் பலவரு டஞ்செலில் |
| | இந்துவி லிரவியில் வந்தோ ரெனவே, |
| | மூட உலகம் மொழியும், யாரே |
| | நாடுவ ராதியை? நன்று நன்றிது ! |