| 55. | தோடம் ! - சுடு ! சுடு ! |
| | தீது நன்றென ஓதவ வெல்லாம் |
| | அறியார்க் கறையும் வெறுமொழி யலவோ? |
| | பாச்சி பாச்சி யென்றழும் பாலர்க்குப் |
| | பூச்சி பூச்சி யென்பது போலாம். |
| 60. | மன்னரை யுலகம் வணங்கவும் பார்ப்பார்க் |
| | கன்னங் கிடைக்கவு மங்ஙன மறைந்து |
| | மதியி லாரை மயக்குவர் வஞ்சமாய். |
| | அதினா னமக்கென்? அப்படி நினைக்கில் |
| | இதுவரை யித்தனை நன்மையெப் படிவரும்? |
| 65. | பார்க்குது மொருகை. சுந்தரன் யந்திரங் |
| | காக்கும் வகையுங் காண்போம் ; சுவான |
| | சக்கரங் குக்கனைத் தடுத்திடும் வகையே |
| | யந்திரத் தந்திர மிருப்பதென் றறியான். |
| | பித்தன் மெத்தவும் ! நமக்கினி யிதுவே |
| 70. | உத்தம வுபாயம். ஓகோ ! சேவக ! |
| | சித்தம் மெத்தக் களித்தோ மிந்த |
| | மணவுரை கேட்டென மன்னன் றுணியப் |
| | பாவனை பண்ணுவோம். ஏ ! ஏ ! சேகவ ! |
| | (சேவகன் எழுந்துவர) |
| | இன்றுநா முற்றவிவ் வின்பம் போல |
| 75. | என்றும் பெற்றிலம். இணையறு மாலை |
| | இந்தா ! தந்தோம். இயம்பாய், |
| | வந்தோம் விடியுமுன் மன்னவைக் கென்றே. | 1 |
| | |
| | (நேரிசை யாசிரியப்பா) |
| | |
| சேவகன். | | வாழ்க ! வள்ளால் ! நின்னுதா ரம்போல் |
| | ஏழுல கெவற்றிலு முண்டோ? |
| 80. | வாழ்க !எப் போதும் மங்கலம் வரவே. | 2 |
| | |
| குடில, | | நல்லது ! விரைந்து செல்லாய் ! நொடியில். |
| (தனிமொழி) | | (சேவகன் போக) |
| | மதியிலி ! என்னே மனிதர் மடமை ! |
| | இதுவு முதாரமா யெண்ணினன். இங்ஙனம் |