பக்கம் எண் :

மனோன்மணீயம்
34

தருமந் தான மென்றுல கறியுங்
85.கரும மனைத்துஞ் செய்பவன் கருத்தைக்
காணி னாணமாம். அவரவர் தமக்கா
எண்ணிய வெண்ண மெய்துவான் பலவும்
பண்ணுவர் புண்ணியம் போல, எல்லாந்
தந்நயங் கருதி யன்றித் தமைப்போற்
90.பின்னொரு வனையெணிப் பேணுவ ருளரோ?
புண்ணியஞ் சீவகா ருண்ணிய மெனப்பல
பிதற்றுதன் முற்றும் பித்தே. அலதேல்
யாத்திரை போன நூற்றுவர், சோறடு
பாத்திரந் தன்னிற் பங்கு பங்காக
95.ஒருவரை யொருவ ரொளித்துப் பருமணல
இட்ட கதையா யிருக்குமோ? அவ்வளவு
எட்டுமோ வுலகின் கட்டைச் சிறுமதி? -
ஆயினும், அரசனைப் போலிலை
பேயர் பெரிய மேதினி யெங்குமே.2
 
 
முதல் அங்கம் : ஐந்தாம் களம்

முற்றிற்று

--------


கலித்துறை

சீரும் வதுவையுஞ் சேர்முறை செப்பியுஞ் சீவகன்றான்

போரும் நிதனமும் புந்திசெய் மந்திரம் போற்றினனே

சாருந் தனுகா ணங்களைத் தானெனுந் தன்மைவந்தால்

யாரும் அருள்வழி நிற்கிலர் மாயை யடைவிதுவே.

முதல் அங்கம்

முற்றிற்று.


ஆசிரியப்பா

52-க்கு அடி830

ஆசிரியத்தாழிசை

6-க்கு 18

வெண்பா

2-க்கு 8

கலித்துறை

1-க்கு 4
----
ஆக, அங்கம் 1-க்கு : பா. 61-க்கு 860