பக்கம் எண் :

மனோன்மணீயம்
35

இரண்டாம் அங்கம்

முதற் களம்

இடம் : அரண்மனை. காலம் : வைகறை

ஜீவகனும் குடிலனும் மந்திராலோசனை.

(நேரிசை ஆசிரியப்பா)


ஜீவகன்.

சொல்லிய தெல்லாஞ் சுந்தர முனிவரே !

புருடோத் தமனெனும் பொறையனே நமக்கு

மருமா னாக மதித்ததும் அவரே.

என்றுங் குழந்தை யன்றே. மன்றல்

5.

விரைவி லாற்ற வேண்டும். நாமிது

வரையும் மறதியா யிருந்தது தவறே

யாம். இனித் தாமச மின்றியிம் மணமே

கருமமாய்க் கருதி முடிப்பாம்.

வருமுன் கருது மந்திர வமைச்சே !

1

குடிலன்,

10.இறைவ ! இதுகேட் டெனக்குள வின்பம்

அறைவதெப் படியான்? அனேக நாளாப்

பலமுறை நினைந்த தூண்டிப் பரிசே.

நலமுறப் புரிசை நன்கு முடியும்

அற்றம் நோக்கி யிருந்தே னன்றிச்

15.

சற்றும் மறந்தே னன்று, தனியே

கட்டளை பிறந்துங் கடிமணந் தன்னை

விட்டுள தோவினி வேறொரு காரியம்?

புருடோத் தமனெனும் பொருநைத் துறைவன்

காண்டகு மாண்டகை யென்றும், ஞானம்

20.

மாண்ட சிந்தைய னென்றும், யாண்டுந்

திரியுந் தவசிக ளுரைசெய யானுங்

கேட்ட துண்டு, மற்றவன் நாட்டிற்கு

இன்றே தூதுவ ரேவின், மங்கையை

மன்றல் செய்வான் மனதோ வன்றோ