பக்கம் எண் :

மனோன்மணீயம்
36

25.

என்றியா மறியலா மெளிதில். அறியார்

பலவும் பழிப்பர். நமக்கதி லொன்றும்

இலை.இன் றேதூ தேவுவம்

பனந்தார் வேய்ந்தோன் அனந்தைப் பதிக்கே.

ஜீவ.

பழிப்ப ரென்ற மொழிப்பய னென்னை?
30.

பகருதி வெளிப்படப் பண்பாய்

நிகரிலாச் சூழ்ச்சி நெடுந்தகை யோனே!

3

குடில,

எண்ணுதற் கில்லை யிறைவ! அவையெலாம்.

கண்ணகன் ஞாலங் கழறும் பலவிதம்.

மணஞ்செய முதன்முதற் பேசி வருதல்,

35.

இணங்கிய ஆடவ ரில்லுள் ளாரே.

அன்றி யாடவர்த் தேடி மன்றல்

சாற்றுதல் தகாதெனப் போற்றுமிவ் வுலகம்.

முன்னைவழக்கு மன்னதே. ஆயினும்,

ஆத்திரந் தனக்குச் சாத்திர மென்னை?

ஜீவ.

40.கூடா தஃதொரு காலும். குடில!

கேடாம் நமது கீர்த்திக் கென்றும்

மாசறு மனோன்மணி தனக்கும் மாசாம்.

என்னே ஆத்திரம்? நமது

கன்னியை விழையும் மன்னருங் குறைவோ?

குடில,

45.குறைவோ வதற்கு மிறைவ! ஓஹோ!

மூவருந் தேவரும யாவரும் விரும்புநங்

கொழுந்தை விழைந்து வந்த வேந்தரைக்

கணக்கிட லாமோ? கலிங்கன், சோழன்,

கன்னடன் வடிவி லொவ்வார்; காந்தர்

50.

மன்னவன் வயதிற் கிசையான்; மச்சன்

குலத்திற் பொருந்தான்; கோசலன் பலத்திற்

கிணங்கான்; விதர்ப்பன் வீர மில்லான்;

வணங்களில் நிடதன், மராடன் கல்வியில்

நேரார்; மகதன் றீராத் தரித்திரன்;

55.

இன்னம் பலரு மிங்ஙனம் நமது

கன்னியை விழைந்துங் கல்வி வடிவு