| | குணம்பலங் குலம்பொரு ளென்றிவை பலவும் இணங்கா ரேமாந் திருந்தார். அரசருட் கொங்கன் றனக்கே யிங்கிவை யாவும் | | 60. | பொருத்த மாயினு மிதுவரைப் பாலியன் ஆகையி லிவ்வயி னணைந்திலன். எங்ஙனந் திருத்தமா யவன்கருத் தறிந்திடுமுனம் ஏவுதுந் தூதரை? ஏதில னன்றே. | | ஜீவ, | | படுமோ வஃதொரு காலும்? குடில | | 65. | மற்றவன் கருத்தினை யுணர வுற்றதோ ருபாய மென்னுள துரையே. | | | 5 |
| குடில, | | உண்டு பலவு முபாயம். பண்டே யிதனைக் கருதியே யிருந்தேன். புதிய கடிபுரி முடியும் முன்னர்க் கழறல் | | 70. | தகுதி யன்றெனக் கருதிச் சாற்றா தொழிந்தேன் மாற்றல ரேறே! | | | 6 |
| ஜீவ, | | நல்லது! குடில! இல்லை யுனைப்போல் எங்குஞ் சூழ்ச்சித் துணைவர். பங்கமி லுபாய மென்கொல்? பகரே. | | | 7 |
| குடில, | 75. | வஞ்சிநா டதனில் நன்செய் நாடெனச் செந்தமிழ் வழங்குந் தேயமொன் றுளது, அதன் அந்தமில் பெருவள மறியார் யாரே? மருதமு நெய்தலு மயங்கியங் கெங்கும் புரையறு செல்வம் நிலைபெற வளரும். | | 80. | மழலைவன் டானம் புலர்மீன் கவர, ஓம்புபு நுளைச்சிய ரெறிகுழை, தேன்பொழி புன்னைநுண் டாதாற் பொன்னிறம் பெற்ற எருமையின் புறத்திருந் திருஞ்சிறை புலர்த்தும் அலைகடற் காக்கைக் கலக்கண் விளைக்கும். | | 85. | கேதகை மலர்நிழ லினமெனக் கருதித் தாராத் தழுவிடச் சார்தரச் சிரித்த ஆம்பல்வாய் கொட்டிடுங் கோங்கலர் தாதே ; வால்வளை சூலுளைந் தீன்றவெண் முத்தம் |
|
|
|