| | மீட்டும் விடுப்பினும் விடுப்பன். அன்றி வாதமே பலவு மோதினு மொருவிதம் ஒப்புர வாகா தொழியான். பின்னர், | | 160. | அந்நியோந் நியசமா தானச் சின்னம் ஆகவோர் விவாக மாயின் நன்றெனக் குறிப்பாற் பொதுவாய்க் கூறிடின், மறுத்திடா னுடன்மண முடிக்குதும் நன்றே | | | 8 |
| ஜீவ, | | மெத்தவுங் களித்தோம் ! உத்தமோ பாயம் | | 165. | இதுவே ! குடில ! இதனால் வதுவையும் நடந்தா மதித்தேம் மனத்தே. | | | 9 |
| குடில, | | அப்படி யன்றே ! செப்பிய வுபாயம் போது மாயினு மேகுந் தூதுவர் திறத்தாற் சித்தி யாகவேண் டியதே. | | 170. | வினைதெரிந் துரைத்தல் பெரிதல. அஃது தனைநன் காற்றலே யாற்றல். அதனால், அன்புங் குடிமைப் பிறப்பு மரசவாம் பண்பு மறியும் பரவுநூ லுணர்வும் தூய்மையும் மன்னவை யஞ்சாத் திண்மையும் | | 175. | வாய்மையுஞ் சொல்லில் வழுவா வன்மையுந் துணிவுங் காலமுங் களமுந் துணியுங் குணமும், மந்திரத் தலைவர் துணைமையும் உடையனே வினையாள் தூதனென் றோதினர். அன்ன தூதரை யனுப்பின் மன்னவ ! | | 180. | உன்ன தெண்ண முறுமே யுறுதி. அன்றெனி லன்றே. அதனால் வென்றிவை வேலாய் விடுவாய் தெரிந்தே. | | | 10 |
| ஜீவ, | | அத்திற முற்று மொத்தவ னாய்நமக் குரிமை பூண்டநின் னருமை மகன்பல | | 185. | தேவனே யுள்ளான். மேவலர் பலர்பான் முன்னம் பன்முறை தூதிலும் முயன்றுளான். அன்னவன் றன்னை யமைச்ச ! ஏவிடத் தயையா யிசைவாய் நீயே. | | | 11 |
|
|
|